பரபரப்பான வாக்கு எண்ணிக்கை எதிரொலி.. மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் சரிந்தது!

Jun 04, 2024,10:02 AM IST

மும்பை: வாக்கு எண்ணிக்கையின்போது தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பின்னடைவு என்ற செய்தி வந்த நிலையில் மும்பை பங்குச் சந்தையில்  பெரும் சரிவு காணப்பட்டது.


சென்செக்ஸ் 2000 புள்ளிகள் சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. லோக்சபா தேர்தலில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேசிய அளவில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.




அதேசமயம், உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணி முன்னிலை எடுத்துள்ளது. பாஜகவுக்கு அங்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. அதேபோல வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கும் பின்னடைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மும்பை பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது.  சென்செக்ஸ் 2000 புள்ளிகள் சரிந்தன. தேசிய பங்குச் சந்தையான நிப்டியிலும் இன்டக்ஸ் 50 குறைந்தது. 


பாஜக கூட்ட அசுரத்தனமான முன்னிலை பெறத் தவறியதாலும், பிரதமரே பின்னடைவு என்ற செய்தி வந்ததாலும் பங்குச் சந்தையில் அது எதிரொலித்துள்ளது. பிரதமர் முன்னிலை பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தேறினால் மட்டுமே பங்குச் சந்தை இயல்புக்குத் திரும்ப முடியும். இல்லாவிட்டால் இன்னும் சரிவைக் காணும் அபாயம் உள்ளது. தற்போது பிரதமர் மோடி முன்னிலைக்கு வந்து விட்டார். அதேபோல தேசிய ஜனநாயகக் கூட்டணியும் சரிவிலிருந்து மீள ஆரம்பித்துள்ளது.


தற்போதைய நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் இருந்தாலும் கூட, இந்தியா கூட்டணியும் கடும் போட்டியைக் கொடுத்து வருகிறது. டிரெண்டும் மாறத் தொடங்கியுள்ளதால் எல்லாத் தரப்பிலும் எதிர்பார்ப்புகள் எகிற ஆரம்பித்துள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்