- ரதிதேவி
கண்களின் பார்வையில் காதல் கொண்டேனே....
உந்தன் பார்வையால்
எந்தன் இதயத்தை திருடி விட்டாய்...
உந்தன் பார்வையில்
வானுக்கும் மண்ணுக்குமான
ஈர்ப்பே தோற்று போனதே.....
உள்ளார்ந்த உணர்வுகளை
புரிந்து கொண்டேனே
உன் காந்த பார்வையால்....

இந்திரலோகமே சென்று விட்டேன்
உந்தன் கூர் பார்வையால்
என்னை ஆட்டிப் படைத்தாயே
உந்தன் ஆழ்மன பார்வையால்
என் மனதைக் கொள்ளைக் கொண்டாயே..
உந்தன் மழலைப் பார்வையால்....
உன் விழிகள் காண
என் விழிகள் வெட்கப்படுகிறதே
உந்தன் குறுகுறு பார்வையில்
உந்தன் பார்வை
மறக்க முடியா நினைவலைகள்...
எழுத முடியா வார்த்தைகள்....
வர்ணிக்க இயலாத் தொடர்கள்.....
என் உள்ளத்தைக் களவாடிச் சென்றாயே
கைது செய்யச் சொல்லி இதயம் துடிக்குதே
உந்தன் காதல் சிறையிலே!
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!
{{comments.comment}}