- ரதிதேவி
கண்களின் பார்வையில் காதல் கொண்டேனே....
உந்தன் பார்வையால்
எந்தன் இதயத்தை திருடி விட்டாய்...
உந்தன் பார்வையில்
வானுக்கும் மண்ணுக்குமான
ஈர்ப்பே தோற்று போனதே.....
உள்ளார்ந்த உணர்வுகளை
புரிந்து கொண்டேனே
உன் காந்த பார்வையால்....

இந்திரலோகமே சென்று விட்டேன்
உந்தன் கூர் பார்வையால்
என்னை ஆட்டிப் படைத்தாயே
உந்தன் ஆழ்மன பார்வையால்
என் மனதைக் கொள்ளைக் கொண்டாயே..
உந்தன் மழலைப் பார்வையால்....
உன் விழிகள் காண
என் விழிகள் வெட்கப்படுகிறதே
உந்தன் குறுகுறு பார்வையில்
உந்தன் பார்வை
மறக்க முடியா நினைவலைகள்...
எழுத முடியா வார்த்தைகள்....
வர்ணிக்க இயலாத் தொடர்கள்.....
என் உள்ளத்தைக் களவாடிச் சென்றாயே
கைது செய்யச் சொல்லி இதயம் துடிக்குதே
உந்தன் காதல் சிறையிலே!
மெய்நட்பு!
பாசமும் நேசமும் பகிர்ந்த நினைவுகள் மனதில் இனிய நினைவுகளாய்!
நட்பற்ற வாழ்க்கையில் முழுமையாகாது நாளும்!
சிந்தனைச் சிதறல்.. புன்னகை ஒன்றையே விதைத்திடுவார்!
வான் மழையும் காற்றும் தந்து வாழ்வு கொடுக்கும் மரங்களே!
Book Review - புத்தக விமர்சனம்.. திட்டம் 6
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்..!
உழைக்காத காசு!
எந்தன் முருகன்!
{{comments.comment}}