கண்களின் பார்வையில்.. காதல் கொண்டேனே!

Jan 28, 2026,01:28 PM IST

- கவிசப்ரி தென்றல், தென்காசி 


கண்களின் பார்வையில் காதல் கொண்டேனே....


உந்தன் பார்வையால் 

எந்தன் இதயத்தை திருடி விட்டாய்...


உந்தன் பார்வையில் 

வானுக்கும் மண்ணுக்குமான

ஈர்ப்பே தோற்று போனதே.....


உள்ளார்ந்த உணர்வுகளை 

புரிந்து கொண்டேனே

உன் காந்த பார்வையால்....




இந்திரலோகமே சென்று விட்டேன் 

உந்தன் கூர் பார்வையால்


என்னை ஆட்டிப் படைத்தாயே

உந்தன் ஆழ்மன பார்வையால்


என் மனதைக் கொள்ளைக் கொண்டாயே..

உந்தன் மழலைப் பார்வையால்....


உன் விழிகள் காண

என் விழிகள் வெட்கப்படுகிறதே

உந்தன் குறுகுறு பார்வையில் 


உந்தன் பார்வை 

மறக்க முடியா நினைவலைகள்...

எழுத முடியா வார்த்தைகள்....

வர்ணிக்க இயலாத் தொடர்கள்.....


என் உள்ளத்தைக் களவாடிச் சென்றாயே 

உந்தன் கள்ளப்பார்வையால்!


கைது செய்யச் சொல்லி இதயம் துடிக்குதே 

உந்தன் காதல் சிறையிலே!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அவள் எழுகிறாள்.. அதனால் ஒளிர்கிறாள்.. She Rises, She Shines!

news

ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!

news

அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் திமுக...காங்கிரசின் கொந்தளிப்பிற்கு இது தான் காரணமா?

news

தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?

news

விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி

news

கண்களின் பார்வையில்.. காதல் கொண்டேனே!

news

25 சீட்டுதானா.. அல்லது கூடுதலாக கிடைக்குமா.. எதிர்பார்ப்பில் காங்கிரஸ்.. என்ன நடக்கும்?

news

இந்தியாவின் பொருளாதாரம் சீராக உள்ளது...பட்ஜெட் தொடர் உரையில் ஜனாதிபதி பெருமிதம்

news

தென்றலே... என் தொலைந்து போன நிழலே!

அதிகம் பார்க்கும் செய்திகள்