- ஆ.வ. உமாதேவி
சாளரத்தின் வழியே பல கனவுகள்!
அக்கனவுகளை நினைவாக்க -
என்னை வளைக்கும் இடமாய் இல்லாமல்....
நான் வளையும் இடமாய் வேண்டும் என் வகுப்பறை!!!
கூண்டுக்கிளியாய் அடைப்பட்டு கிடக்காமல்
அக்னிச்சிறகுகள் அணிந்து
சின்னதாய் சிதறும் தீப்பொறியைக்கூட
சிகரத்தில் சுடராக்க வேண்டும்
என் வகுப்பறை!!!

போராடத் திராணியில்லாமல் மனம் ஒடிந்து ...
நான் விசும்பும் நொடிகளிலும்
கைகோர்த்து என்னை ஆதரிக்கும் தோழிகள் நிறைந்த இடமாய்
இருக்க வேண்டும் என் வகுப்பறை !!!
தொட்டு விடாத தூரத்தில் இருக்கும்
இலக்குகளை அடைய சாத்தியக்கூறாகவும் ...
தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் இலக்குகளை..
இலகுவாக்க முயற்சிகளை முடுக்க ஆசிரியர்கள் உள்ள இடமாய் வேண்டும்
என் வகுப்பறை !!!
எழுத எழுத முடிவில்லாமல் நீளும்
என் வகுப்பறை கனவுகளை
தற்காலிகமாய் முடித்துக் கொள்கிறேன் -
வைக்காது விட்ட முற்றுப்புள்ளியுடன்....!
(ஆ.வ. உமாதேவி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார்)
புத்தகம்
Kavi Kalai poem: விதை
தோல்வியில் துவளேல்!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
தேடலும் தொலைதலும்!
Haiku by Ira Mumtaz Begum: கண்ணாடி பெட்டிக்குள்.. கண்ணீர் விடும் மீன்கள்!
கலைநிகழ்ச்சி களைகட்டுது.. பள்ளி வளாகம்.. ரசித்து பார்க்குது!
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
{{comments.comment}}