நெல்லை: 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியது தாம்பரம் போலீஸ். இதனைத் தொடர்ந்து மே 2 ல் ஆஜராக உள்ளார் நயினார் நாகேந்திரன்.
கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டவர் நயினார் நாகேந்திரன். இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சென்னை தாம்பரம் டூ நெல்லை எக்ஸ்பிரஸில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு எவ்வித ஆவணங்களும் இன்றி ரொக்கமாக 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சதீஸ், நவீன், பெருமாள், ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.பின்னர் இவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது நயினார் நாகேந்திரனுக்காக பண பட்டுவாடா செய்ய இவருடைய உறவினர்கள் முருகன், ஆசைத்தம்பி, ஜெயசங்கர், ஆகியோர் 4 கோடி ரூபாய் ரொக்கப்பணத்தை நெல்லைக்கு கொண்டு செல்ல சொன்னதாக வாக்குமூலம் அளித்தனர்.
இதனை அடுத்து நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் மூவரும் நேரில் ஆஜராகும் படி தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பியது. ஆனால் இவர்கள் ஆஜராகவில்லை. அப்போது ஆஜராக பத்து நாட்கள் கால அவகாசம் கேட்டிருந்தனர்.
இந்த நிலையில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் இன்று இரண்டாவது முறையாக சம்மன் வழங்கினர். இதையடுத்து நயினார் நாகேந்திரன் வரும் மே இரண்டாம் தேதி போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க இருக்கிறார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}