இன்று நவராத்திரி 2ம் நாள் : அம்பிகையின் வடிவம், கோலம், நிறம், நைவேத்தியம் இது தான்

Oct 04, 2024,10:09 AM IST

சென்னை :  2024ம் ஆண்டிற்கான நவராத்திரி விழா அக்டோபர் 03ம் தேதி துவங்கி, 11ம் தேதி வரை உள்ளது. நவராத்திரி விழாவின் நிறைவு நாளான அக்டோபர் 11ம் தேதி அன்றும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வழிபாடும், அக்டோபர் 12ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட உள்ளது. வட மாநிலங்களில் நவராத்திரி துர்கா பூஜை என்ற பெயரிலும், விஜயதசமியானது தசரா என்ற பெயரிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் வந்தாலும் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறையில் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரியே மிகவும் விமர்சையாக பெரும்பாலானவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமை துவங்கி, தசமி வரையிலான நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வீடுகளிலும், கோவில்களிலும் கொலு வைத்து கொண்டாடுவது உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கு உரியதாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கு உரியதாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கு உரியதாகவும் சொல்லப்படுகிறது.




இருந்தாலும் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் ஒவ்வொரு வடிவத்தை கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரியின் இரண்டாம் நாள் அக்டோபர் 04ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளுக்கு மற்றொரு சிறப்பு என்னவென்றால், இந்த ஆண்டு வரலட்சுமி நோம்பு மற்றும் ஆடிப் பெருக்கு அன்று விரதம் இருந்து தாலிச்சரடு மாற்றிக் கொள்ள முடியாமல் போன பெண்கள் இந்த நாளில் வரலட்சுமி நோன்பு கடைபிடித்து, தங்களின் தாலி பாக்கியம் நிலைக்க தாலிச்சரடி மாற்றிக் கொள்ளலாம். இந்த ஆண்டு நவராத்திரியில் அக்டோபர் 11ம் தேதி மற்றொரு வெள்ளிக்கிழமை வருகிறது. ஆனால், அன்று சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளதால் அன்று நோன்பு வைப்பது பலருக்கும் முடியாத காரியமாக இருக்கும். அதனால் அக்டோர் 04ம் தேதி தாலிச்சரடு மாற்றிக் கொள்ளலாம்.


நவராத்திரி 2024 இரண்டாம் நாள் வழிபாடு : 


அம்பிகையின் பெயர் - ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி

கோலம் - கட்டம் வகை கோலம்

மலர் - முல்லை

இலை - மருவு

நைவேத்தியம் - புளி சாதம்

சுண்டல் - வேர்கடலை

பழம் - மாம்பழம்

நிறம் - மஞ்சள்


நவ துர்க்கை வழிபாட்டில் நவராத்திரியின் 2ம் நாளில் பிரம்மச்சாரினி மாதாவை வழிபட வேண்டும். இவள் ஆயிரம் வருடங்கள் கடும் தவம் இருந்து சிவ பெருமானை கணவனாக அடையும் வரம் உள்ளிட்ட பல வரங்களை பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. இவள் ஆதி சக்தியாக கருதப்படுவதால், இவளை கிரியா சக்தியின் வடிவில் வழிபட வேண்டும். இவளுக்கு பல விதமான பழ வகைகள் படைத்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்