சென்னை : 2024ம் ஆண்டிற்கான நவராத்திரி விழா அக்டோபர் 03ம் தேதி துவங்கி, 11ம் தேதி வரை உள்ளது. நவராத்திரி விழாவின் நிறைவு நாளான அக்டோபர் 11ம் தேதி அன்றும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வழிபாடும், அக்டோபர் 12ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட உள்ளது. வட மாநிலங்களில் நவராத்திரி துர்கா பூஜை என்ற பெயரிலும், விஜயதசமியானது தசரா என்ற பெயரிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் வந்தாலும் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறையில் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரியே மிகவும் விமர்சையாக பெரும்பாலானவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமை துவங்கி, தசமி வரையிலான நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வீடுகளிலும், கோவில்களிலும் கொலு வைத்து கொண்டாடுவது உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கு உரியதாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கு உரியதாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கு உரியதாகவும் சொல்லப்படுகிறது.

இருந்தாலும் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் ஒவ்வொரு வடிவத்தை கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரியின் இரண்டாம் நாள் அக்டோபர் 04ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளுக்கு மற்றொரு சிறப்பு என்னவென்றால், இந்த ஆண்டு வரலட்சுமி நோம்பு மற்றும் ஆடிப் பெருக்கு அன்று விரதம் இருந்து தாலிச்சரடு மாற்றிக் கொள்ள முடியாமல் போன பெண்கள் இந்த நாளில் வரலட்சுமி நோன்பு கடைபிடித்து, தங்களின் தாலி பாக்கியம் நிலைக்க தாலிச்சரடி மாற்றிக் கொள்ளலாம். இந்த ஆண்டு நவராத்திரியில் அக்டோபர் 11ம் தேதி மற்றொரு வெள்ளிக்கிழமை வருகிறது. ஆனால், அன்று சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளதால் அன்று நோன்பு வைப்பது பலருக்கும் முடியாத காரியமாக இருக்கும். அதனால் அக்டோர் 04ம் தேதி தாலிச்சரடு மாற்றிக் கொள்ளலாம்.
நவராத்திரி 2024 இரண்டாம் நாள் வழிபாடு :
அம்பிகையின் பெயர் - ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
கோலம் - கட்டம் வகை கோலம்
மலர் - முல்லை
இலை - மருவு
நைவேத்தியம் - புளி சாதம்
சுண்டல் - வேர்கடலை
பழம் - மாம்பழம்
நிறம் - மஞ்சள்
நவ துர்க்கை வழிபாட்டில் நவராத்திரியின் 2ம் நாளில் பிரம்மச்சாரினி மாதாவை வழிபட வேண்டும். இவள் ஆயிரம் வருடங்கள் கடும் தவம் இருந்து சிவ பெருமானை கணவனாக அடையும் வரம் உள்ளிட்ட பல வரங்களை பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. இவள் ஆதி சக்தியாக கருதப்படுவதால், இவளை கிரியா சக்தியின் வடிவில் வழிபட வேண்டும். இவளுக்கு பல விதமான பழ வகைகள் படைத்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!
"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு
4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு
"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
{{comments.comment}}