காத்மண்டு : நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இதுவரை 903 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 4,247 ஆக உயர்ந்துள்ளது என்றும் அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பனிப்பாறைகளில் சரிந்து, உருகியதால் நேபாளத்தில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அடுத்தடுத்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வீடுகளை இழந்து பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், நிலச்சரிவுகளில் சிக்கியும் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் :

சம்பவ இடங்களுக்கு விரைந்துள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ராணுவத்தினர் மற்றும் காவல் துறையினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கான்கிரீட் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பொருட்டு ஜேசிபி (JCB) உள்ளிட்ட கனரக இயந்திரங்கள் பயன்பாட்டில் இறக்கப்பட்டுள்ளன.
செம்மண் மற்றும் களிமண் வெள்ள நீர் சூழ்ந்துள்ள அபாயகரமான பகுதிகளில், உயிர்காக்கும் உடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் மீட்புக் குழுவினர் படகுகள் மூலம் சிக்கியவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். மேலும் வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதால் பல இடங்களில் மக்கள் வீடுகளின் மேற்கூரையிலும், உயரமான கட்டடங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
முகாம்களில் தஞ்சமடைந்த மக்கள் :
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. எனினும், தொடரும் மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக மீட்புப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்வதில் பெரும் சவால்கள் நிலவுகின்றன.
காணாமல் போன 4,247 பேரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையைச் சமாளிக்க நேபாள அரசு சர்வதேச சமூகத்தின் உதவிகளையும் எதிர்பார்த்துள்ளது.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு
நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் 2026: உலக சாதனை படைத்த இந்தியாவின் தீப்தி சர்மா
சட்டசபையில் இன்று எந்தெந்த துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம்?
நெருக்கடிகளின் நடுவில் விஜய்.. இப்படியே அமைதி காப்பாரா.. அல்லது அதிரடிக்கு மாறுவாரா?
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித் திருவிழா.. முருக பக்தர்களுக்கு கொண்டாட்டம்!
{{comments.comment}}