- டிலாணி ஸ்ரீதரன்
உணர்வுக்குள் ஊடுருவும் மெய்க்காதல் எக்குலத்தையும் ஏற்பதேன்?
உயிருக்குள் உறையும் உதிரத்தில் நிறமாற்றம் செய்யவில்லை ஏன்?
உயிர்ப்பிக்கும் கருவறையும் உறவை தர மொழியை தேடுவதில்லை ஏன்?
உதவியெனும் தேவையில் இன வேறுபாடு பார்ப்பதில்லை ஏன்?
உடலுருக்கும் மதுவினையருந்த மார்க்கம் வினவப்படுவதில்லை ஏன்?
உணவளிக்கும் உழவர்களின் சமயப் பின்னணி அறியப்படாதது ஏன்?
உபாதைகளின் உச்சத்தில் வைத்தியர்கள் எம்மொழியென கேற்பதில்லை ஏன்?
உடைமைகளின் உருவாக்கம் யாரென வினவாமல் சேமிக்கப்படுவது ஏன்?

உனக்கென தேவைகளை நாடிட சாதி மதம் தேவையில்லை ஏன்?
உலகத்தை படைத்த கடவுளுக்கும் சாதி சிலை வைப்பது ஏன்?
சிந்தித்து செயல்பட சிந்தையும் தெளியும் புரிந்து கொள்ளவில்லை ஏன்?
சிக்கலை உருவாக்காதே
வாழ்வது சிலகாலம்
மனித நேயத்தோடு வாழ்ந்திடுவோம்.
கார்கே விவகாரத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை
ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்
ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!
சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!
சமூகம் திருந்துவது எப்போது?
அன்புள்ள அப்பா!
ஒற்றைச் சொல்
கண்மணி!
{{comments.comment}}