14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

Apr 11, 2025,04:55 PM IST

டெல்லி: மும்பை தீவிரவாத வழக்கில் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டுக் கொண்டு வரப்பட்டிருக்கும் தஹவூர் ஹூசேன் ராணா, டெல்லியில் பலத்த பாதுகாப்புடன் தேசிய புலனாய்வு முகமையின் தலைமை அலுவலகத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.


14க்கு 14 அடி அளவிலான அறையில் தஹவூர் ராணா அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். அவரது அறை சிசிடிவி கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் அவரது அறைக்குப் பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


2008ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளி தஹவூர் ராணா.  அவரை நேற்று அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தி வந்தது இந்தியா.  அதன் பிறகு அவர் டெல்லி தேசிய புலனாய்வு முகமையின் தலைமை அலுவலகத்திற்கு் கொண்டு வரப்பட்டு அங்கு பாதுகாப்புடன் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.




அந்த அறை உள்ள வளாகமே இரும்புக் கோட்டை போல மாற்றப்பட்டிருக்கிறது. யாரும் அந்தப் பகுதிக்குள் நுழைந்து விட முடியாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி போலீஸாரும், கூடுதல் புற ராணுவப் படையினரும் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


அவரது அறைக்குள் செல்வதற்கு 12 தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது. வேறு யாரும் அங்கு போக முடியாது. அவரது அறைக்குள் ஒரு படுக்கை மட்டுமே உள்ளது. பாத்ரூம் உள்ளது.  சாப்பாடு, தண்ணீர், மருந்துகள் உள்ளிட்டவை அவரது அறைக்கு கொடுக்கப்படுகின்றனவாம்.


64 வயதாகும் ராணா, பாகிஸ்தான் வம்சாவளி கனடா நாட்டு குடிமகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்