டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
நாட்டின் நிதி நிர்வாகம் தொடர்பாக மத்திய அரசு ஆண்டுதோறும் நிதி ஆயோக் கூட்டத்தை நடத்தி வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது தான் நிதி ஆயோக். தேசிய வளர்ச்சியில் மாநிலங்களிடையே பங்கு, அரசின் திட்டங்கள் மற்றும் முன் முயற்சிகளை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துதல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக இந்த நிதி ஆயோக் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு முதல் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தின் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். அதன்படி இந்த கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் நிதி ஆயோக் கூட்டம் 10வது கூட்டமாகும்.
இந்த கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச முதல்வர்கள், துணை நிலை கவர்னர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தை கடந்த ஆண்டு புறக்கணித்த தமிழ்நாடு முதல்வர் மு..ஸ்டாலின் இந்தாண்டு கலந்து கொண்டுள்ளார். கடந்த ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தில், 20 மாநில முதல்வர்களும் 6 யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்களும் கலந்து கொண்டனர்.
மாநிலங்களை ஒருங்கிணைத்து வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதற்கான `டீம் இந்தியா' என்ற பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டிற்கு இணங்க கூட்டம் நடைபெற்று வருகிறது. நாடு எதிர்கொள்ளும் சவால்கள், மாநிலங்களை முக்கிய பங்காளர்களாக கொண்டு வளர்ந்த பாரதம் உருவாக்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு, கல்வி நிதி, 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து கோரிக்கை வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மாலை பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்
{{comments.comment}}