சென்னை: சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழைக்கு இப்போது பிரேக். அடுத்து 9 நாட்களுக்குப் பிறகுதான் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வட கிழக்குப் பருவ மழை சூடு பிடித்திருந்தது. திரும்பிய திசையெல்லாம் சூப்பரான மழை பெய்து வந்தது. எந்த இடத்திலும் மக்களை பாதிக்காத அளவுக்கு அருமையான மழையை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களும் அனுபவித்தன. சென்னையெல்லாம் கிட்டத்தட்ட ஊட்டி, கொடைக்கானல் போல இருந்தது. அவ்வப்போது குட்டி குட்டியாக மழை பெய்து மக்களை குஷியில் ஆழ்த்தியிருந்தது.
இது போக நெல்லை, தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்கள் என தமிழ்நாடு முழுவதும் பரவலாக மிதமானது முதல் கன மழை வரையிலான மழைப் பொழிவு இருந்தது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் மழை இல்லை. குறிப்பாக தலைநகர் சென்னையில் மழை சுத்தமாக இல்லை. வெயில்தான் அடிக்கிறது. அவ்வப்போது மோடமாக இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த 9 நாட்களுக்கு சென்னையில் மழையை எதிர்பார்க்க முடியாது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 27ம் தேதி வரை காலை நேரங்களில் லேசான பனியையும் நாம் காண முடியும். பகல் நேரங்களில் வறண்ட வானிலையே நிலவக் கூடும். குளிராகவும் இருக்கலாம். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் வட தமிழ்நாடு மாவட்டங்களில் இது குளிர் காலமாகவே இருக்கும்.
அடுத்த சில நாட்களுக்கு தென் கோடி தமிழ்நாட்டில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளார் பிரதீப் ஜான்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கரூர் சம்பவத்தால் பின்னடைவு.. வலுவாக தாக்கும் திமுக.. கூட்டணியைத் தேடும் நிலையில் விஜய்?
கரூர் சம்பவத்தில் விஜய்யின் இதயத்தில் காயமோ, வலியோ இல்லை.. விஜய் கேள்வி கேட்பது தவறு.. சீமான்!
தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
ஆபத்தான அரசியல் இது.. கரூர் துயரத்தில் விஜய்க்கு கொஞ்சம் கூட கவலையில்லை: திருமாவளவன் பாய்ச்சல்
பாஜக விஜய்யை காப்பாற்றி... கரூர் சம்பவத்தில் பிணத்தின் மீது அரசியல் செய்கின்றன: செல்வப்பெருந்தகை
திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரிப்பு: அன்புமணி ராமதாஸ்!
பாமக இளைஞர் அணி தலைவராக .. ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் நியமனம்
வசீகரிக்கும் ரங்கோலி.. விரல்களுக்குள் வித்தைகளை ஒளித்து வைத்திருக்கும் பத்மாவதி கிஷோர்!
தேசத் தந்தை காந்தியும்.. கருப்பு காந்தி கர்மவீரர் காமராஜரும்!
{{comments.comment}}