சென்னை: சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழைக்கு இப்போது பிரேக். அடுத்து 9 நாட்களுக்குப் பிறகுதான் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வட கிழக்குப் பருவ மழை சூடு பிடித்திருந்தது. திரும்பிய திசையெல்லாம் சூப்பரான மழை பெய்து வந்தது. எந்த இடத்திலும் மக்களை பாதிக்காத அளவுக்கு அருமையான மழையை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களும் அனுபவித்தன. சென்னையெல்லாம் கிட்டத்தட்ட ஊட்டி, கொடைக்கானல் போல இருந்தது. அவ்வப்போது குட்டி குட்டியாக மழை பெய்து மக்களை குஷியில் ஆழ்த்தியிருந்தது.
இது போக நெல்லை, தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்கள் என தமிழ்நாடு முழுவதும் பரவலாக மிதமானது முதல் கன மழை வரையிலான மழைப் பொழிவு இருந்தது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் மழை இல்லை. குறிப்பாக தலைநகர் சென்னையில் மழை சுத்தமாக இல்லை. வெயில்தான் அடிக்கிறது. அவ்வப்போது மோடமாக இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த 9 நாட்களுக்கு சென்னையில் மழையை எதிர்பார்க்க முடியாது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 27ம் தேதி வரை காலை நேரங்களில் லேசான பனியையும் நாம் காண முடியும். பகல் நேரங்களில் வறண்ட வானிலையே நிலவக் கூடும். குளிராகவும் இருக்கலாம். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் வட தமிழ்நாடு மாவட்டங்களில் இது குளிர் காலமாகவே இருக்கும்.
அடுத்த சில நாட்களுக்கு தென் கோடி தமிழ்நாட்டில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளார் பிரதீப் ஜான்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}