சென்னை: சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழைக்கு இப்போது பிரேக். அடுத்து 9 நாட்களுக்குப் பிறகுதான் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வட கிழக்குப் பருவ மழை சூடு பிடித்திருந்தது. திரும்பிய திசையெல்லாம் சூப்பரான மழை பெய்து வந்தது. எந்த இடத்திலும் மக்களை பாதிக்காத அளவுக்கு அருமையான மழையை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களும் அனுபவித்தன. சென்னையெல்லாம் கிட்டத்தட்ட ஊட்டி, கொடைக்கானல் போல இருந்தது. அவ்வப்போது குட்டி குட்டியாக மழை பெய்து மக்களை குஷியில் ஆழ்த்தியிருந்தது.

இது போக நெல்லை, தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்கள் என தமிழ்நாடு முழுவதும் பரவலாக மிதமானது முதல் கன மழை வரையிலான மழைப் பொழிவு இருந்தது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் மழை இல்லை. குறிப்பாக தலைநகர் சென்னையில் மழை சுத்தமாக இல்லை. வெயில்தான் அடிக்கிறது. அவ்வப்போது மோடமாக இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த 9 நாட்களுக்கு சென்னையில் மழையை எதிர்பார்க்க முடியாது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 27ம் தேதி வரை காலை நேரங்களில் லேசான பனியையும் நாம் காண முடியும். பகல் நேரங்களில் வறண்ட வானிலையே நிலவக் கூடும். குளிராகவும் இருக்கலாம். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் வட தமிழ்நாடு மாவட்டங்களில் இது குளிர் காலமாகவே இருக்கும்.
அடுத்த சில நாட்களுக்கு தென் கோடி தமிழ்நாட்டில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளார் பிரதீப் ஜான்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!
திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்
ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!
சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)
ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)
கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க
வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!
தாயன்பு !
All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!
{{comments.comment}}