சென்னை : ஜனநாயகன் படத்திற்கு சென்சார் வழங்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட் தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதித்ததுடன், அந்த உத்தரவை ரத்து செய்துள்ளது சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி பெஞ்ச். மேலும் இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விஜய் நடித்த ஜனநாயகன் படத்தில் பாதுகாப்பு துறையின் சின்னங்கள் பயன்படுத்தப்பட்டது உள்ளிட்ட சில காரணங்களுக்காக அந்த படத்திற்கு தணிக்கை குழு சான்று வழங்க மறுப்பு தெரிவித்து வருகிறது. சென்சார் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் படத்திற்கு யு/ஏ சான்று வழங்க வேண்டும் என முடிவு செய்த நிலையில் ஒருவர் மட்டும் எதிராக புகார் தெரிவித்ததால் படத்தை மறு ஆய்வு செய்ய சென்சார் போர்டு உத்தரவிட்டது. ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கியதால் படக்குழு சென்னை ஐகோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்தது.

ஜனவரி 09ம் தேதி காலை 9 மணிக்கு ஜனநாயகன் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அவசர வழக்கு மீதான வழக்கின் தீர்ப்பும் இன்று காலைக்க ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை முதல் வழக்காக ஜனநாயகன் வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, படத்திற்கு யு/ஏ சான்று வழங்க உத்தரவிட்டார். ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்று வழங்க மறுப்பு, தவறான முன்னுதாரணம் என கூறி இருந்தார். இந்த தீர்ப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, அதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக சென்சார் போர்டு தெரிவித்தது.
இந்த மேல்முறையீட்டு வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ப்படும் என கூறப்பட்ட நிலையில், இன்று பிற்பகலிலேயே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் சென்சார் போர்டு சார்பில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார். காலையில் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், உடனடியாக அவசரமாக மேல்முறையீடு செய்தது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.பதில் மனு தாக்கல் செய்ய தங்களுக்கு அவகாசம் அளிக்கப்படாததால் மேல்முறையீடு செய்ததாக சென்சார் போர்டு முறையிட்டது.
பிறகு இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதி ஆஷா, ஜனநாயகன் படத்திற்கு யு/ஏ சான்று வழங்க வேண்டும் என காலையில் அளித்த தீர்ப்பை தடை செய்து, ரத்து செய்தனர். இந்த வழக்கின் விசாரணைக்கு பொங்கல் விடுமுறைக்கு பிறகு ஜனவரி 21ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என ஐகோர்ட் தலைமை நீதிபதி பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. இதனால் பொங்கலுக்கு ஜனநாயகன் படம் ரிலீசாகாது என்பது உறுதியாகி உள்ளது.
ஒவ்வொரு குடும்பத்திற்கு கருணைத் தொகையாக ரூ10,000 வழங்கப்படும்:எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு
இயற்கையுடன் போராடி வருகிறார் தோழர் நல்லகண்ணு.. சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன்
வேலூர் விஜய் கூட்டத்துக்கு அனுமதி கொடுப்பதில் தாமதமா?.. போலீஸ் தந்த விளக்கம்
ரயில் சேவை ரத்தால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது: கனிமொழி
இனி எண்ட ஸ்டேட் கேரளா இல்ல .. கேரளம்.. பெயர் மாற்றத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தென் தமிழகத்தில் நாளை இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்... எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை!
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்து ஆட்சி அமைத்தவர் ஜெயலலிதா: ஓ.பன்னீர்செல்வம்
யாரையும் காலி பண்ண வரவில்லை.. நல்ல விஷயங்களைச் செய்யவே வந்திருக்கிறேன்.. சிவகார்த்திகேயன்
{{comments.comment}}