குடை ரெடியா.. 3 நாளில் வருது வட கிழக்கு பருவ மழை!

Oct 19, 2023,05:05 PM IST
சென்னை: வடகிழக்கு பருவமழை இன்னும் 3  நாட்களில் தொடங்கவுள்ளதாக சென்னை  வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இது வரை பெய்து வந்த தென் மேற்குப் பருவ மழை இன்றுடன் விடைபெற்றுள்ளது. நாடு முழுவதும் தென் மேற்குப் பருவ மழை விலகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழையால் தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 8 சதவீதம் அளவுக்கு மழை கிடைத்துள்ளது.  இந்த வருடம் பெய்த தென்மேற்கு பருவ மழை காலத்தில் நல்ல மழை பெய்துள்ளது. இந்த தென்மேற்கு மழை பொழிவைக்காட்டிலும், வரவிருக்கும் வடகிழக்கு பருவ மழை அதிகளவில் பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.



இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 3 நாட்களில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். அக்டோபர் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களில் வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்பதால் வடகிழக்கு பருவ மழை இன்னும் 3 நாட்களில் தொடங்கும்.

சமீபத்திய செய்திகள்

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்