சென்னை: தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் உருவான புயலின் காரணமாக வடகிழக்கு பருவமழையின் தொடக்கம் வலுவிழந்து காணப்பட்டது.
இந்நிலையில் தற்போது அரபிக் கடலில் ஒன்றும், வங்கக் கடலில் ஒன்றுமாக, இரண்டு புயல்கள் கரையைக் கடந்த நிலையில் வடகிழக்கு பருவமழை வலுவடைய தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றின் திசையில் ஏற்பட்ட பருவக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக டெல்டா உட்பட்ட கடலூர், சிவகங்கை, மதுரை, விழுப்புரம், திண்டுக்கல், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 14 மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும்.
அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
தமிழ்நாட்டில் இதுவரை அக்டோபர் 1 முதல் அக்டோபர் 25 வரை 78.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாகவும், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 39 சதவீதம் குறைவு எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு.. 3வது உலகப் போர் வெடிக்குமா?
Hot air balloon fire: பிரேசில் துயரம்.. ஹாட் ஏர் பலூன் தீப்பிடித்து எரிந்து விழுந்தது.. 8 பேர் பலி
போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை
வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்
இல்லத்தரசி.. உண்மையில் அப்படித்தான் நாம் பெண்களை மதிக்கிறோமா?
ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!
தனுசின் குபேரா முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?.. ராயனை விட மோசம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
93 ஆண்டுகளில் இல்லாத வரலாறு.. சதம் போடுவதில் அசகாய சாதனையைப் படைத்த.. ஜெய்ஸ்வால்!
{{comments.comment}}