டெல்லி: மூக்கு நோண்டுவது.. ரொம்பவும் அன்ஈசியான செயல் இது.. பொது இடம் என்றும் பாராமல் பலர் மூக்கை போட்டு அந்த நோண்டு நோண்டுவார்கள்.. அதில் ஒரு சுகம் அவர்களுக்கு.. நிற்க.. உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி இருக்கு பாஸ்.. அடுத்த பாராவுக்கு வாங்க அப்படியே!
மூக்கு நோண்டும் பழக்கம் உள்ளவர்களுக்கு கோவிட் பாதிப்பு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானிகள் இதுதொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. யாருக்கெல்லாம் கோவிட் பாதிப்பு எளிதாக வர வாய்ப்புள்ளது என்பதுதான் இவர்களது ஆய்வின் மையம் ஆகும். அப்போது கோவிட் தாக்குதலுக்கான நோயாளிகளுடன் அதிக அளவில் தொடர்பு உடையவர்களுக்கு குறிப்பாக சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவிட் தாக்குதலுக்கான வாய்ப்புகள் அதிகம் என்று இதில் தெரிய வந்தது.
அதில் ஒரு சுவாரஸ்யமான விஷயமும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அது என்னவென்றால், மூக்கு நோண்டும் பழக்கம் உடையவர்களுக்கு கோவிட் தாக்குதல் அதிகம் இருப்பதாக தெரிய வந்தது. மொத்தம் 219 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கிட்டத்தட்ட 85.5 சதவீதம் பேருக்கு மூக்கு நோண்டும் பழக்கம் இருந்தது தெரிய வந்தது. இவர்களில் பலரும் அடிக்கடி மூக்கு நோண்டும் பழக்கம் உள்ளவர்களாம். பலருக்கு இது ஹேபிட்டாகவே இருக்கிறதாம்.
ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் மூக்கு நோண்டும் பழக்கம் இல்லாதவர்களை விட அந்தப் பழக்கம் உள்ளவர்களுக்குத்தான் அதிக அளவில் கோவிட் தாக்குதல் ஏற்பட்டதும் தெரிய வந்தது. அதேசமயம், நகம் கடிக்கும் பழக்கம் உள்ளோர், மூக்கு கண்ணாடி அணிவோ, தாடி வைத்திருப்போர் உள்ளிட்ட பல்வேறு வகையான மனிதர்களிடம் இதுபோன்ற தாக்குதல் அபாயம் அதிகம் இல்லை அல்லது அறவே இல்லை.
இதுகுறித்து ஆய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த ஒரு ஆய்வாளர் கூறுகையில், இந்த கண்டுபிடிப்பு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. எந்த வகையில் எல்லாம் கோவிட் பரவுகிறது, தாக்குகிறது என்பதை அறிவதே எங்களது ஆய்வின் முக்கிய நோக்கமாகும். அதில் இந்த மூக்கு நோண்டும் பழக்கம் உடையோர் அதிக அளவில் கோவிட் தாக்குலுக்குள்ளாகியுள்ளனர் என்பது நாங்களே எதிர்பாராத கண்டுபிடிப்பாகும்.
பொதுவாகவே மூக்கு நோண்டும் பழக்கமானது சுகாதாரக் கேடாகும். கையை கண்ட இடத்தில் வைத்து விட்டு அதைக் கொண்டு மூக்கை நோண்டும்போது வழக்கமாகவே பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படும் அபாயங்கள் உள்ளன. தற்போது கோவிட் இதில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது என்றார் அவர்.
ஹலோ பாஸ்.. இன்னுமா மூக்கை நோண்டிட்டிருக்கீங்க.. முதல்ல போய் கையைக் கழுவிட்டு உசுரைக் காப்பாத்திக்கங்க!
நேபாளத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
தாய்!!!
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
{{comments.comment}}