கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!

Apr 18, 2025,05:44 PM IST

சென்னை: கூட்டணி அழைப்பிற்கு நன்றி. எங்களது பயணம் எங்கள் கால்களை நம்பிதானே தவிர அடுத்தவர் தோள்களை நம்பி அல்ல என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.


ஒரு கட்சி இன்னொரு கட்சியை கூட்டணிக்கு அழைப்பது என்பது இயல்பு தான். நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு ஒரே நிலைப்பாடு தான். தேர்தல் அரசியல் கட்சி அரசியில் செய்கிறவர்கள் கூட்டணியை தேடி போவார்கள். நாங்கள் முழுக்க முழுக்க மக்கள் அரசியல் செய்கிறவர்கள். மக்களிடம் இருந்து மக்களுக்காக வந்த பிள்ளைகள். அதனால் மக்களோடு சேர்ந்து தான் தேர்தலை சந்திப்போம்.




தொடர்ச்சியாக 4 முறை 2 சட்டமன்ற தேர்தல், 2 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டோம். 5வது முறையாக ஒரு கட்சி தனித்து போட்டியிவது என்றால் அது நாம் தமிழர் கட்சி தான். வெற்றி, தோல்வியை தாண்டி தனித்து போட்டியிடும் கட்சி தான் நாம் தமிழர். நாங்கள் மக்களை தேடி சென்று மக்களுக்காக அரசியல் செய்கிறோம்.கூட்டணி எங்கள் கொள்கை அல்ல. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பி தான். அடுத்தவர் கால்கள், தோள்களை நம்பினால் எங்கள் இலக்கின் பயணத்தை அடைய முடியாது. 


எங்கள் விடுதலை எங்களை நம்மி தான். பிறர் தோள்களில் ஏறி நின்று உயரத்தை காட்டுவதை விட, தனித்து நின்று உண்மையான உயரத்தை காட்டுவதே மேலானது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிடுவேன். அதில், 117 பெண்களுக்கு வாய்ப்பு, 117 ஆண்களுக்கு வாய்ப்பு . தவெக தலைவர் விஜய் எதார்த்தமானவர். விஜய் இப்தார் நோன்பின் பங்கேற்றதில் உள் நோக்கம் கற்பிக்க வேண்டியதில்லை. விஜய்யை பற்றி உங்களுக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னங்க பெரிய பணம்.. மக்களுக்காக எதையும் தூக்கி எறிஞ்சிட்டு வரலாம்.. அரியலூரில் விஜய்

news

Ilaiayraja: அமுதே தமிழே அழகிய மொழியே.. எங்கள் உயிரே.. இளையராஜாவுக்கு கோலாகல பாராட்டு விழா

news

C.M.சிங்காரவேலன் எனும் நான்... புதிய படத்தை எழுதி இயக்கும் பார்த்திபன்.. செம ஸ்டில் வெளியீடு!

news

பழைய, புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திமுக கோட்டையைத் தொட முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

Vijay maiden Campaign: விஜய்யின் முதல் சட்டசபைத் தேர்தல் பிரச்சார பேச்சு எப்படி இருந்தது?

news

போருக்கு தயாராவதற்கு முன் குலதெய்வமாக நினைத்து மக்களை சந்திக்க வந்துள்ளேன்: தவெக தலைவர் விஜய்!

news

பல மணி நேர தாதமத்திற்குப் பின்னர் மரக்கடைக்கு வந்து சேர்ந்தார் விஜய்.. பேசப் போவது என்ன?

news

விஜய் வருகையால்.. திணறிப் போனது திருச்சி.. விமான நிலையத்தை அதிர வைத்த தொண்டர்கள்

news

சொன்னீர்களே? செய்தீர்களா?... திமுகவிற்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பிய தவெக தலைவர் விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்