கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!

Apr 18, 2025,05:44 PM IST

சென்னை: கூட்டணி அழைப்பிற்கு நன்றி. எங்களது பயணம் எங்கள் கால்களை நம்பிதானே தவிர அடுத்தவர் தோள்களை நம்பி அல்ல என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.


ஒரு கட்சி இன்னொரு கட்சியை கூட்டணிக்கு அழைப்பது என்பது இயல்பு தான். நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு ஒரே நிலைப்பாடு தான். தேர்தல் அரசியல் கட்சி அரசியில் செய்கிறவர்கள் கூட்டணியை தேடி போவார்கள். நாங்கள் முழுக்க முழுக்க மக்கள் அரசியல் செய்கிறவர்கள். மக்களிடம் இருந்து மக்களுக்காக வந்த பிள்ளைகள். அதனால் மக்களோடு சேர்ந்து தான் தேர்தலை சந்திப்போம்.




தொடர்ச்சியாக 4 முறை 2 சட்டமன்ற தேர்தல், 2 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டோம். 5வது முறையாக ஒரு கட்சி தனித்து போட்டியிவது என்றால் அது நாம் தமிழர் கட்சி தான். வெற்றி, தோல்வியை தாண்டி தனித்து போட்டியிடும் கட்சி தான் நாம் தமிழர். நாங்கள் மக்களை தேடி சென்று மக்களுக்காக அரசியல் செய்கிறோம்.கூட்டணி எங்கள் கொள்கை அல்ல. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பி தான். அடுத்தவர் கால்கள், தோள்களை நம்பினால் எங்கள் இலக்கின் பயணத்தை அடைய முடியாது. 


எங்கள் விடுதலை எங்களை நம்மி தான். பிறர் தோள்களில் ஏறி நின்று உயரத்தை காட்டுவதை விட, தனித்து நின்று உண்மையான உயரத்தை காட்டுவதே மேலானது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிடுவேன். அதில், 117 பெண்களுக்கு வாய்ப்பு, 117 ஆண்களுக்கு வாய்ப்பு . தவெக தலைவர் விஜய் எதார்த்தமானவர். விஜய் இப்தார் நோன்பின் பங்கேற்றதில் உள் நோக்கம் கற்பிக்க வேண்டியதில்லை. விஜய்யை பற்றி உங்களுக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்