சென்னை: கூட்டணி அழைப்பிற்கு நன்றி. எங்களது பயணம் எங்கள் கால்களை நம்பிதானே தவிர அடுத்தவர் தோள்களை நம்பி அல்ல என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஒரு கட்சி இன்னொரு கட்சியை கூட்டணிக்கு அழைப்பது என்பது இயல்பு தான். நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு ஒரே நிலைப்பாடு தான். தேர்தல் அரசியல் கட்சி அரசியில் செய்கிறவர்கள் கூட்டணியை தேடி போவார்கள். நாங்கள் முழுக்க முழுக்க மக்கள் அரசியல் செய்கிறவர்கள். மக்களிடம் இருந்து மக்களுக்காக வந்த பிள்ளைகள். அதனால் மக்களோடு சேர்ந்து தான் தேர்தலை சந்திப்போம்.

தொடர்ச்சியாக 4 முறை 2 சட்டமன்ற தேர்தல், 2 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டோம். 5வது முறையாக ஒரு கட்சி தனித்து போட்டியிவது என்றால் அது நாம் தமிழர் கட்சி தான். வெற்றி, தோல்வியை தாண்டி தனித்து போட்டியிடும் கட்சி தான் நாம் தமிழர். நாங்கள் மக்களை தேடி சென்று மக்களுக்காக அரசியல் செய்கிறோம்.கூட்டணி எங்கள் கொள்கை அல்ல. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பி தான். அடுத்தவர் கால்கள், தோள்களை நம்பினால் எங்கள் இலக்கின் பயணத்தை அடைய முடியாது.
எங்கள் விடுதலை எங்களை நம்மி தான். பிறர் தோள்களில் ஏறி நின்று உயரத்தை காட்டுவதை விட, தனித்து நின்று உண்மையான உயரத்தை காட்டுவதே மேலானது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிடுவேன். அதில், 117 பெண்களுக்கு வாய்ப்பு, 117 ஆண்களுக்கு வாய்ப்பு . தவெக தலைவர் விஜய் எதார்த்தமானவர். விஜய் இப்தார் நோன்பின் பங்கேற்றதில் உள் நோக்கம் கற்பிக்க வேண்டியதில்லை. விஜய்யை பற்றி உங்களுக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
கிடைத்தது பெரும்பான்மை.. விஜய் ஆட்சி அமைக்க சிக்கல் நீங்கியது.. அடுத்து என்ன நடக்கும்?
தவெகவிடம் நாங்கள் பதவிகளைக் கோரவில்லை.. விடுதலைச் சிறுத்தைகள் விளக்கம்
DMK: தோல்வி கண்டு தொய்வடைய மாட்டோம்.... அன்று கருணாநிதி சொன்னது!
மக்கள் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது.. ஆளுநர் ஜனநாயகத்தைப் புறக்கணிக்கிறார்.. சிபிஎம்
சிந்தனைச் சிதறல்.. நாளைய நிலையை உணராமல் கொடுக்கும் அனைத்தும் நம்மையே கெடுக்கும்!
தவெக ஆட்சி அமைக்க விசிக நிபந்தனையற்ற ஆதரவு?.. ஆனா ஒரு ட்விஸ்ட்!
தாலியை கையில் வைத்துக் கொண்டு.. இது வேண்டாம் விஜய்.. கஸ்தூரி அட்வைஸ்
நரை வந்தபோதும் கரைதொட்டு மோதுவதும்.. ஆதலால் காதல் செய்வீர்!
இரண்டெழுத்து மந்திரம்!
{{comments.comment}}