பெரியாரை ஏற்க மாட்டேன்.. இப்பதான் தொடங்கியுள்ளேன்.. போகப் போக நிறைய உள்ளது.. சீமான்

Feb 10, 2025,06:07 PM IST

திருச்சி:   யார் பெரியாரை ஏற்றுக்கொண்டாலும் நான் பெரியாரை ஏற்றுக்கொள்ள மாட்டேன். என்னுடைய தம்பிகளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பெரியாரை ஏற்றுக்கொள்ளும் என்னுடைய தம்பிகள் என்னை விட்டு விலகி செல்லலாம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஓருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்


திருச்சிக்கு வந்த சீமான் அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:




நாம் தமிழர் கட்சியினருக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்த ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் பெற்றது எங்களது சொந்த வாக்கு. ஆனால், திமுக தனித்து நின்று வாக்குகளை பெறவும் முடியாது, பணம் கொடுக்காமல் வாக்குகளை பெறவும் முடியாது. 


தனித்து வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சியின் வாக்குகளை அதிமுக அல்லது பாஜகவின் வாக்குகள் என முத்திரை குத்துகிறது திராவிடம். 15 கட்சிகளிடம் கூட்டணி வைத்து வாக்குகளை பெறுகிற திராவிடம் தான் இப்படி பேசுகிறது. பாஜகவினர் எதற்காக எனக்கு வாக்குகளை போட வேண்டும். அதிமுகவினர் நான் வளர வேண்டும் என விரும்புவார்களா? அனைத்து கட்சிகளையும் எதிர்த்து நிற்கிற எனக்கு எப்படி அவர்களது வாக்குகள் கிடைக்கும்.


ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசு இயந்திரம் முழுமையாக திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக இருந்தது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை தக்க வைக்க இன்னும் ஆயிரம் வாக்குகள் தேவை. அவ்வளவுதான். என்னுடைய கோட்பாடு இந்தியா மற்றும் திராவிட கட்சிகளுக்கு எதிரானது. நாங்கள் சத்தியத்தில் பக்கம் நிற்பவர்கள். என்னால் முடியவில்லை எனில் எனக்கு பின்னால் வரும் பிள்ளைகள் வெல்வார்கள். 


நான் திராவிடத்தில் இருந்து வந்தவன். இப்பொழுது தெளிவு பிறந்ததால் எதிர்க்கிறேன். ஏனெனில் அவர்களது கொள்கைக்கானவர்கள் அல்ல. நம்மை கொள்ளையடிக்க வந்தவர்கள். பெரியாரைப் படித்து விட்டு பேசுகிறேன். என் கேள்விக்கு தான் பதில் சொல்ல வேண்டும். யார் பெரியாரை ஏற்றுக்கொண்டாலும் நான் பெரியாரை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்னுடைய தம்பிகளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பெரியாரை ஏற்றுக்கொள்ளும் என்னுடைய தம்பிகள் என்னை விட்டு விலகி செல்லலாம்.


நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இருந்தால் வரிகொடா இயக்கம் நடத்துவோம். ஆங்கிலேயர் ஆட்சியில் தான் வரிகொடா இயக்கம் நடத்த முடியுமா? இப்போது நடத்த முடியாமல் போய்விடுமா என்ன? பெரியார் என்பது எங்களுக்கு தேவையில்லை. உலகமே கொண்டாடினாலும் நான் எதிர்ப்பேன். என்னை பின்பற்றுகிறவர்கள் பெரியார் வேண்டும் என்றால் என்னை விட்டு வெளியேறி போய்விடலாம். 


கடந்த முறை நோட்டாவிற்கு 797 ஓட்டு கிடைத்தது. தற்போது 6 ஆயிரம் ஆக உயர்ந்து உள்ளது காரணம் என்ன. 42 சுயேட்சைகள் 12 ஆயிரம் ஓட்டுகள் வாங்கி உள்ளனர். அவர்களுக்கு ஓட்டு போட்டது யார்?. நான் வீரன், எனக்கு படையெல்லாம் தேவையில்லை. சண்டைக்கு தனியாக தான் போவேன். நான் புலி, தனித்து தான் வேட்டையாடுவேன். நான் துவக்கத்திலிருந்து சொல்கிறேன். நான் தனியாக தான் நிற்பேன். கோழைகள் தான் கூட்டத்தோடு நிற்பார்கள்.  கூட்டத்தோடு நிற்பவனுக்கு வீரமும் துணிவும் தேவையில்லை. தனித்து நிற்பவனுக்கு வீரமும் துணிவும் தேவை எனது கோட்பாடு தனித்துவமானது என்றார் சீமான்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

வாடும் மனம் வாசம் பெறும் அம்மா சொல்லும் ஒரு சொல்லில்...!

news

CM Vijay Speech: கஜானாவில் என்ன இருக்கோ.. முதல்ல வெள்ளை அறிக்கை.. பிறகுதான் வேலையே.. விஜய்

news

MK Stalin Attacks: எடுத்த எடுப்பிலேயே பணம் இல்லைன்னு பேச ஆரம்பிக்காதீங்க விஜய்.. மு.க.ஸ்டாலின்

news

Vijay Record: 828 நாட்களில்.. இதுவே முதல் முறை...தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய விஜய்!

news

Assembly Protem Speaker: தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா பதவியேற்றார்!

news

Vijay Sarkar: இது தான் விஜய் சர்க்கார்.. 9 அமைச்சர்களுடன் உற்சாக பதவியேற்பு.. உற்சாகத்தில் தவெக!

news

CM Joseph Vijay: "C ஜோசப் விஜய் எனும் நான்"... தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்!

news

கறுப்பு நிற கோட்டில்.. வித்தியாசமான கெட்டப்பில் பதவியேற்பு விழாவில் விஜய்!

news

CM Vijay: எல்லாமே 10.. விஜய்யின் பதவியேற்பு விழா சென்டிமென்ட்டை கவனிச்சீங்களா?

அதிகம் பார்க்கும் செய்திகள்