பெரியாரை ஏற்க மாட்டேன்.. இப்பதான் தொடங்கியுள்ளேன்.. போகப் போக நிறைய உள்ளது.. சீமான்

Feb 10, 2025,06:07 PM IST

திருச்சி:   யார் பெரியாரை ஏற்றுக்கொண்டாலும் நான் பெரியாரை ஏற்றுக்கொள்ள மாட்டேன். என்னுடைய தம்பிகளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பெரியாரை ஏற்றுக்கொள்ளும் என்னுடைய தம்பிகள் என்னை விட்டு விலகி செல்லலாம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஓருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்


திருச்சிக்கு வந்த சீமான் அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:




நாம் தமிழர் கட்சியினருக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்த ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் பெற்றது எங்களது சொந்த வாக்கு. ஆனால், திமுக தனித்து நின்று வாக்குகளை பெறவும் முடியாது, பணம் கொடுக்காமல் வாக்குகளை பெறவும் முடியாது. 


தனித்து வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சியின் வாக்குகளை அதிமுக அல்லது பாஜகவின் வாக்குகள் என முத்திரை குத்துகிறது திராவிடம். 15 கட்சிகளிடம் கூட்டணி வைத்து வாக்குகளை பெறுகிற திராவிடம் தான் இப்படி பேசுகிறது. பாஜகவினர் எதற்காக எனக்கு வாக்குகளை போட வேண்டும். அதிமுகவினர் நான் வளர வேண்டும் என விரும்புவார்களா? அனைத்து கட்சிகளையும் எதிர்த்து நிற்கிற எனக்கு எப்படி அவர்களது வாக்குகள் கிடைக்கும்.


ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசு இயந்திரம் முழுமையாக திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக இருந்தது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை தக்க வைக்க இன்னும் ஆயிரம் வாக்குகள் தேவை. அவ்வளவுதான். என்னுடைய கோட்பாடு இந்தியா மற்றும் திராவிட கட்சிகளுக்கு எதிரானது. நாங்கள் சத்தியத்தில் பக்கம் நிற்பவர்கள். என்னால் முடியவில்லை எனில் எனக்கு பின்னால் வரும் பிள்ளைகள் வெல்வார்கள். 


நான் திராவிடத்தில் இருந்து வந்தவன். இப்பொழுது தெளிவு பிறந்ததால் எதிர்க்கிறேன். ஏனெனில் அவர்களது கொள்கைக்கானவர்கள் அல்ல. நம்மை கொள்ளையடிக்க வந்தவர்கள். பெரியாரைப் படித்து விட்டு பேசுகிறேன். என் கேள்விக்கு தான் பதில் சொல்ல வேண்டும். யார் பெரியாரை ஏற்றுக்கொண்டாலும் நான் பெரியாரை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்னுடைய தம்பிகளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பெரியாரை ஏற்றுக்கொள்ளும் என்னுடைய தம்பிகள் என்னை விட்டு விலகி செல்லலாம்.


நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இருந்தால் வரிகொடா இயக்கம் நடத்துவோம். ஆங்கிலேயர் ஆட்சியில் தான் வரிகொடா இயக்கம் நடத்த முடியுமா? இப்போது நடத்த முடியாமல் போய்விடுமா என்ன? பெரியார் என்பது எங்களுக்கு தேவையில்லை. உலகமே கொண்டாடினாலும் நான் எதிர்ப்பேன். என்னை பின்பற்றுகிறவர்கள் பெரியார் வேண்டும் என்றால் என்னை விட்டு வெளியேறி போய்விடலாம். 


கடந்த முறை நோட்டாவிற்கு 797 ஓட்டு கிடைத்தது. தற்போது 6 ஆயிரம் ஆக உயர்ந்து உள்ளது காரணம் என்ன. 42 சுயேட்சைகள் 12 ஆயிரம் ஓட்டுகள் வாங்கி உள்ளனர். அவர்களுக்கு ஓட்டு போட்டது யார்?. நான் வீரன், எனக்கு படையெல்லாம் தேவையில்லை. சண்டைக்கு தனியாக தான் போவேன். நான் புலி, தனித்து தான் வேட்டையாடுவேன். நான் துவக்கத்திலிருந்து சொல்கிறேன். நான் தனியாக தான் நிற்பேன். கோழைகள் தான் கூட்டத்தோடு நிற்பார்கள்.  கூட்டத்தோடு நிற்பவனுக்கு வீரமும் துணிவும் தேவையில்லை. தனித்து நிற்பவனுக்கு வீரமும் துணிவும் தேவை எனது கோட்பாடு தனித்துவமானது என்றார் சீமான்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்

news

ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

news

கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்

news

எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை

news

திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை..பாமக கூறி வந்த குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது: அன்புமணி

news

10 கிராம் தங்கத்தோட விலை என்ன தெரியுமா.. தீபாவளியையொட்டி வச்சு செய்யும் நகை விலை!

news

நிதீஷ் குமார் நிச்சயம் முதல்வராக மாட்டார்.. பாஜக முடிவெடுத்து விட்டது.. சொல்கிறது காங்கிரஸ்

news

பாகிஸ்தான், இலங்கையுடனான முத்தரப்புத் தொடர்.. திடீரென விலகியது ஆப்கானிஸ்தான்

அதிகம் பார்க்கும் செய்திகள்