"தனியார் மருத்துவமனைகள்.. மனிதாபிமானத்துடன் நடந்துக்கங்க".. டாக்டர் திவ்யா சத்யராஜ் கோரிக்கை!

Mar 09, 2024,08:09 PM IST

சென்னை: தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை தயவு செய்து மனிதாபிமானத்துடன் நடத்துங்கள் என டாக்டர் திவ்யா சத்தியராஜ் தனியார் மருத்துவமனை பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


டாக்டர் திவ்யா சத்யராஜ் ஒரு ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். இவர் நடிகர் சத்யராஜின் மகள் மற்றும் சிபிராஜின் சகோதரி.  அட்சய பாத்திரம் அறக்கட்டளையின் தூதுவராக செயல்பட்டு வருபவர். இந்த அறக்கட்டளை, தமிழக பள்ளி குழந்தைகளுக்கு, இந்திய அரசின் இலவச மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


2020 ஆம் ஆண்டு மகிழ்மதி இயக்கம் என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். இதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் மற்றும் சத்தான உணவுகளை சாப்பிட முடியாத ஏழை குழந்தைகளுக்கு இலவச சத்தான உணவுகளை வழங்கி வருகின்றனர். இது தவிர  அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் ஏழை மக்களுக்கான  விழிப்புணர்வு  தகவல்களையும் பதிவிட்டு வருகிறார் திவ்யா சத்யராஜ்.




இந்த நிலையில் டாக்டர் திவ்யா சத்யராஜ் தனியார் மருத்துவமனைகள் குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், எல்லோருக்கும் வணக்கம். நான் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ். தனியார் மருத்துவமனைகள் . அதாவது பிரைவேட் ஹாஸ்பிடலில் நடக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேச தான் இந்த பதிவு.


என்னுடைய டாக்டர் நண்பர்களிடம் இருந்து வந்த தகவல்கள் தான் இது. சில தனியார் மருத்துவமனைகளில் அந்த மருத்துவமனைக்கு லாபம் வர வேண்டும் என்ற நோக்கில் நோயாளிகளுக்கு தேவையில்லாத பிளட் டெஸ்ட், தேவையில்லாத ஸ்கேன், தேவையில்லாத எம்ஆர்ஐ, இதெல்லாம் பண்ண வைக்கிறார்கள். ஒரு பேஷண்ட் குணமான பிறகும் ஒன்று இரண்டு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரீசார்ஜ் பண்றாங்க. பிரைவேட் ஹாஸ்பிடலுக்கு போனா நோய் குணமாகும் என்ற நம்பிக்கையை விட பணம் காலியாகும் என்ற பயம் தான் பேஷண்ட்டுக்கு அதிகம் இருக்கு.


எங்க அமைப்பின் மூலமாக சில நோயாளிகளுக்கு நாங்க உதவி செய்தாலும், எல்லா நோயாளிகளுக்கும் உதவி செய்வது என்பது சாத்தியப்படுத்த முடியாத விஷயம். (Patients should not treated like profit generating machines) நோயாளிகள் வருவாயை உருவாக்கும் இயந்திரங்கள் கிடையாது. பிரைவேட் ஹாஸ்பிடல் வைத்திருப்பவர்கள் நோயாளிகளை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. வணக்கம் என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்