எடப்பாடி பழனிச்சாமியை.. "நீ வா போ" என்று.. சரமாரியாக வெளுத்து வாங்கிய ஓபிஎஸ்!

Apr 25, 2023,09:09 AM IST
திருச்சி: திருச்சியில் நேற்று நடந்த ஓபிஎஸ் அணி மாநாட்டின்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நம்பிக்கைத் துரோகி,  உன்னை வரலாறு மன்னிக்காது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக தாக்கிப் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வழக்கமாக பொறுமையாக, நிதானமாக பேசக் கூடியவர் ஓ.பி.எஸ். மரியாதைக்குறைவாக பொது வெளியில் அவர் பேசியதும் மிக மிக குறைவு. அப்படிப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் நேற்றைய திருச்சி மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.



திருச்சி ஜி கார்னர் பகுதியில் ஓபிஎஸ் அணியின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்திருந்த இந்த பிரமாண்டக் கூட்டம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஓ.பி.எஸ்ஸுக்கு இவ்வளவு பெரிய கூட்டமா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு மிகப் பெரிய கூட்டம் திரண்டிருந்தது.

கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், எடப்பாடி பழனிச்சாமியை பிடி பிடி என பிடித்தார்.  ஓ.பிஎஸ் பேச்சிலிருந்து சில துளிகள்:

ஐயா பழனிச்சாமி அவர்களே.. உங்களுக்கு யார் பதவி கொடுத்தது. உங்களுக்கு யார் பதவி கொடுத்தது.. சின்னம்மா அவர்கள் உங்களுக்கு முதல்வர் பதவியைத் தந்தார்கள். நாம் உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும். அவர்களைப் பார்த்து நாய்கள்.. நாய் எதையோ பார்த்து குரைக்கிறது என்று சொல்கிறீர்கள்.. எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகி.. வரலாறு உன்னை மன்னிக்குமா.. தொண்டர்களே நீங்கள் கூறுங்கள்.. மன்னிக்குமா, மன்னிக்காது. 

இப்படிப்பட்ட ஒரு ஆள் தனக்குத்தானே பொதுச் செயலாளராக தானே முடி சூட்டிக் கொண்டு, அது ஒரு கேலிக்கூத்து. புரட்சித்தலைவர் என்றால் ஒரு அடையாளம் உண்டு. அழகான தொப்பி, கருப்புக் கண்ணாடி. அந்தத் தொப்பிக்கும், கருப்புக் கண்ணாடிக்கும் அழகு சேர்த்தவரே நம்ம புரட்சித் தலைவர் எம்ஜிஆர்தான். அதைப் போடடுக் கொண்டு கேமராவுக்கு முன்னாடி போஸ் கொடுக்கிறியே எவ்வளவு பெரிய அநியாயம், அக்கிரமம். 

நீயும் புரட்சித் தலைவரும் ஒன்றா. அவருடைய கால் தூசிக்கு நீ ஆக மாட்டாய். அவர் கருணைக் கடல், அன்பு தெய்வம், கொடை வள்ளல். இந்த இயக்கத்தை தனக்குப் பின்னால் யார் வழி நடத்த வேண்டும் என்று தீர்க்கதரிசனமாக அம்மாவை தந்த தலைவர். உனக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது.

2011 சட்டசபைத் தேரத்லுக்கு முன்பு அம்மா எங்களை அழைத்து தமிழ்நாட்டின் முக்கிமயான இடங்களில் கூட்டம் நடத்த வேண்டும் என்று சொன்னார். முதலில் கோயம்புத்தூர். அடுத்து திருச்சி. இந்த திருச்சிதான் இங்கு நடந்த கூட்டம்தான் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது.  அடுத்த முதல்வர்  அம்மாதான் என்று தீர்மானித்த நகரம் திருச்சி. இங்கு கடல் இல்லை என்ற குறை இருந்தது.. அதை தொண்டர்களாகிய நீங்கள் தீர்த்து வைத்து விட்டீர்கள் என்று ஓ.பி.எஸ். பேசினார்.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்