ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3வது பதக்கம்.. 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம்!

Aug 01, 2024,03:45 PM IST

பாரிஸ்: பாரிசில் நடைபெற்று வரும் ஆடவர் 50 மீட்டர் (3பி) ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.


2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு 3வது பதக்கம் கிடைத்துள்ளது. 50மீட்டர் ரைப்பில் தொடர் 3 பிரிவுகளில் நடைபெற்றது. 3 நிலைகளில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் முதலில் ஆறாவது இடத்தில் இருந்த ஸ்வப்னில் அடுத்தடுத்து புள்ளிகளை பெற்று 3வது நிலைக்கு முன்னேறினார். 3 நிலையில் அதிக புள்ளிகள் எடுத்து ஸ்வப்னில் வெண்கல பதக்கம் வெற்றுள்ளார். 




29 வயதான ஸ்வப்னில் சிங் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் பகுதியை சேர்ந்தவர். இவர் கடந்த 2015ம் ஆண்டு இவருக்கு இந்திய ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதராக பணி கிடைத்தது. இந்த பணியில் இருந்து கொண்டே துப்பாக்கி சுடுதலிலும் பயிற்சி பெற்று வந்தார். துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் காரணமாக பல வருடங்களாக பயிற்சி எடுத்து வந்துள்ளார் ஸ்வப்னில். தற்போது ஒலிம்பிக்கில்  வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.


10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மானு பக்கர் இரண்டு வெண்கல பதக்கம் பெற்றுள்ள நிலையில்,  தற்போது ஸ்வப்னில் பெற்ற பதக்கத்துடன் 3 பதக்கங்கள் இந்தியாவிற்கு கிடைத்துள்ளன.  பாரிசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு கிடைத்த 3 பதக்கங்களும் துப்பாக்கி சுடுதலில் தான் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்