பாரிஸ்: பாரிசில் நடைபெற்று வரும் ஆடவர் 50 மீட்டர் (3பி) ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு 3வது பதக்கம் கிடைத்துள்ளது. 50மீட்டர் ரைப்பில் தொடர் 3 பிரிவுகளில் நடைபெற்றது. 3 நிலைகளில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் முதலில் ஆறாவது இடத்தில் இருந்த ஸ்வப்னில் அடுத்தடுத்து புள்ளிகளை பெற்று 3வது நிலைக்கு முன்னேறினார். 3 நிலையில் அதிக புள்ளிகள் எடுத்து ஸ்வப்னில் வெண்கல பதக்கம் வெற்றுள்ளார்.

29 வயதான ஸ்வப்னில் சிங் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் பகுதியை சேர்ந்தவர். இவர் கடந்த 2015ம் ஆண்டு இவருக்கு இந்திய ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதராக பணி கிடைத்தது. இந்த பணியில் இருந்து கொண்டே துப்பாக்கி சுடுதலிலும் பயிற்சி பெற்று வந்தார். துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் காரணமாக பல வருடங்களாக பயிற்சி எடுத்து வந்துள்ளார் ஸ்வப்னில். தற்போது ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மானு பக்கர் இரண்டு வெண்கல பதக்கம் பெற்றுள்ள நிலையில், தற்போது ஸ்வப்னில் பெற்ற பதக்கத்துடன் 3 பதக்கங்கள் இந்தியாவிற்கு கிடைத்துள்ளன. பாரிசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு கிடைத்த 3 பதக்கங்களும் துப்பாக்கி சுடுதலில் தான் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?
Heritage day.. தமிழ்ப் பாரம்பரியத்தைப் போற்றுவோம்.. கொண்டாடுவோம்!
{{comments.comment}}