ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3வது பதக்கம்.. 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம்!

Aug 01, 2024,03:45 PM IST

பாரிஸ்: பாரிசில் நடைபெற்று வரும் ஆடவர் 50 மீட்டர் (3பி) ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.


2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு 3வது பதக்கம் கிடைத்துள்ளது. 50மீட்டர் ரைப்பில் தொடர் 3 பிரிவுகளில் நடைபெற்றது. 3 நிலைகளில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் முதலில் ஆறாவது இடத்தில் இருந்த ஸ்வப்னில் அடுத்தடுத்து புள்ளிகளை பெற்று 3வது நிலைக்கு முன்னேறினார். 3 நிலையில் அதிக புள்ளிகள் எடுத்து ஸ்வப்னில் வெண்கல பதக்கம் வெற்றுள்ளார். 




29 வயதான ஸ்வப்னில் சிங் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் பகுதியை சேர்ந்தவர். இவர் கடந்த 2015ம் ஆண்டு இவருக்கு இந்திய ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதராக பணி கிடைத்தது. இந்த பணியில் இருந்து கொண்டே துப்பாக்கி சுடுதலிலும் பயிற்சி பெற்று வந்தார். துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் காரணமாக பல வருடங்களாக பயிற்சி எடுத்து வந்துள்ளார் ஸ்வப்னில். தற்போது ஒலிம்பிக்கில்  வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.


10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மானு பக்கர் இரண்டு வெண்கல பதக்கம் பெற்றுள்ள நிலையில்,  தற்போது ஸ்வப்னில் பெற்ற பதக்கத்துடன் 3 பதக்கங்கள் இந்தியாவிற்கு கிடைத்துள்ளன.  பாரிசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு கிடைத்த 3 பதக்கங்களும் துப்பாக்கி சுடுதலில் தான் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

Political Update: அதிமுக டூ தவெக.. விஜய்யை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்!

news

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் கே.ஏ.செங்கோட்டையன்.. நாளை தவெகவில் சேருகிறாரா?

news

புதுச்சேரியில் ரோடுஷோ நடத்தும் தவெக.. விஜய்யின் மாஸான மாஸ்டர் பிளான் இது தானா?

news

தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 1ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

Greyshark.. பார்க்க அப்படியே பென்குவின் மாதிரியே இருக்கும்.. ஆனால் மேட்டரே வேறப்பா!

news

தமிழகம் பற்றிய கவர்னரின் கருத்து...மிக கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

news

TET தேர்வு எழுத விலக்கு அளிக்க கோரி... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

கோடியில் கொள்ளை அடிக்க தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதா?: அன்புமணி ராமதாஸ்

news

மாவீரன் பொல்லான் சிலை.. திறந்து வைத்து புகழாரம் சூட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்