பாரிஸ்: பாரிசில் நடைபெற்று வரும் ஆடவர் 50 மீட்டர் (3பி) ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு 3வது பதக்கம் கிடைத்துள்ளது. 50மீட்டர் ரைப்பில் தொடர் 3 பிரிவுகளில் நடைபெற்றது. 3 நிலைகளில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் முதலில் ஆறாவது இடத்தில் இருந்த ஸ்வப்னில் அடுத்தடுத்து புள்ளிகளை பெற்று 3வது நிலைக்கு முன்னேறினார். 3 நிலையில் அதிக புள்ளிகள் எடுத்து ஸ்வப்னில் வெண்கல பதக்கம் வெற்றுள்ளார்.

29 வயதான ஸ்வப்னில் சிங் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் பகுதியை சேர்ந்தவர். இவர் கடந்த 2015ம் ஆண்டு இவருக்கு இந்திய ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதராக பணி கிடைத்தது. இந்த பணியில் இருந்து கொண்டே துப்பாக்கி சுடுதலிலும் பயிற்சி பெற்று வந்தார். துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் காரணமாக பல வருடங்களாக பயிற்சி எடுத்து வந்துள்ளார் ஸ்வப்னில். தற்போது ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மானு பக்கர் இரண்டு வெண்கல பதக்கம் பெற்றுள்ள நிலையில், தற்போது ஸ்வப்னில் பெற்ற பதக்கத்துடன் 3 பதக்கங்கள் இந்தியாவிற்கு கிடைத்துள்ளன. பாரிசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு கிடைத்த 3 பதக்கங்களும் துப்பாக்கி சுடுதலில் தான் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!
வாக்காளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.. இணைய வழி திருத்தம்.. தேர்தல் ஆணையம் ஏற்பாடு
காந்தா படம் எப்படி இருக்கு? (திரை விமர்சனம்)
காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!
பெருவெள்ளமா.. நீங்க வாங்க சந்திக்க நாங்க ரெடி.. கெத்தாக காத்திருக்கும் பள்ளிக்கரணை!
கோவை வரும் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!
சார் படிவத்தை நிரப்புவதில் குழப்பமா.. கவலைப்படாதீங்க.. சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு
தொடர்ந்து 4வது நாளாக சரிந்தது தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.1,120 குறைவு!
தமிழ்நாடு, அஸ்ஸாம், கேரளா.. 2026ல் வரிசையாக களை கட்டப் போகும் சட்டசபைத் தேர்தல்கள்
{{comments.comment}}