- சிவ.ஆ. மலர்விழி ராஜா
கருணையின் வடிவே திரு உருவே.....
பாபா உந்தன் அற்புதங்கள்......
வாழும் காலம் யாவும் உந்தன் .....
வரமே அருளிட வேண்டுகிறோம்.....
மின்னல் ஒளியாய் கண்ணொளியை......
கருணையால் மீட்டு தந்தவரே .....
உள்ளம் மகிழ உன் புகழை.....
உலகம் போற்றிட நீ அருள்வாய் ......

உள்ளம் உருகிட வேண்டி வந்தோம் .....
தஞ்சமெனவே நீ அருள்வாய்.....
வரங்கள் நீயும் தந்தருள்வாய்.....
ஜகமே உந்தன் திருவடியை .....
தினமும் வணங்கிட மகிழ்ந்திடுவாய்......
துவாரகமாயினில் காட்சி தந்து.......
துனியினில் உதியாய் அருள்கின்றாய் .....
சாவடி ஊர்வல பல்லக்கில் .....
சாதுவாய் நீயும் வரம் தருவாய்.....
குருஸ்தானத்தில் அருளிடும்...
உன் மகிமை அகிலமே உன்னருள் வேண்டிடுமே
சாயி உந்தன் நாமங்கள் போற்றிட..... ஆனந்தமாகிடுமே....!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
திமுகவின் அடுத்த அதிரடி.. விளிம்புநிலையில் இருப்போர்க்கு சிறப்பு நிதி அறிவிப்பு!
பிடியை தளர்த்தாத திமுக, காங்கிரஸ்...நேரம் ஆக ஆக அதிகரிக்கும் பரபரப்பு
திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகும்...கோபண்ணா நம்பிக்கை
இது தான் சட்ட ஒழுங்கு தரமா?...நாங்குநேரி படுகொலை...திமுக.,வை விளாசிய விஜய்
ராஜ்ய சபா எம்பி ஆகிறார் நிதின் நபீன்: பாஜகவின் இளம் தேசிய தலைவர் பீகாரிலிருந்து தேர்வு
திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா? முதல்வர் இல்லத்தில் முக்கிய ஆலோசனை
இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு...டெல்லி பாஜக அலுவலகத்தில் நடந்தது என்ன?
திமுக - காங்கிரஸ் கூட்டணி: இழுபறிக்கு இடையில் இன்று முக்கிய அறிவிப்பு?
தடையினை உடைத்திடு
{{comments.comment}}