- சிவ.ஆ. மலர்விழி ராஜா
கருணையின் வடிவே திரு உருவே.....
பாபா உந்தன் அற்புதங்கள்......
வாழும் காலம் யாவும் உந்தன் .....
வரமே அருளிட வேண்டுகிறோம்.....
மின்னல் ஒளியாய் கண்ணொளியை......
கருணையால் மீட்டு தந்தவரே .....
உள்ளம் மகிழ உன் புகழை.....
உலகம் போற்றிட நீ அருள்வாய் ......

உள்ளம் உருகிட வேண்டி வந்தோம் .....
தஞ்சமெனவே நீ அருள்வாய்.....
வரங்கள் நீயும் தந்தருள்வாய்.....
ஜகமே உந்தன் திருவடியை .....
தினமும் வணங்கிட மகிழ்ந்திடுவாய்......
துவாரகமாயினில் காட்சி தந்து.......
துனியினில் உதியாய் அருள்கின்றாய் .....
சாவடி ஊர்வல பல்லக்கில் .....
சாதுவாய் நீயும் வரம் தருவாய்.....
குருஸ்தானத்தில் அருளிடும்...
உன் மகிமை அகிலமே உன்னருள் வேண்டிடுமே
சாயி உந்தன் நாமங்கள் போற்றிட..... ஆனந்தமாகிடுமே....!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
World Letter Writing day: கஷ்டப்பட்டு கடிதம் எழுதி எத்தனை நாளாச்சு!
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
உலக கடித தினம்.. இனிய நினைவுகளுக்கு வணக்கம்!
செம்மொழியான தமிழ் மொழியே
நம்பிக்கையின் முளை மனதில்!
கரிய நிற காகமே.. காத்திருப்பேன் உனக்காக!
செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்.. 2026ம் ஆண்டின் 9வது மாதம்.. சிறப்புகள்!
பாட்டிகள் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை!
அழகிய மாற்றம்!
{{comments.comment}}