அமிர்தசர் கிராமங்களில் கண்டுபிடிக்கப்பட்ட ராக்கெட்டுகள்.. பாகிஸ்தான் ராணுவம் வீசியதா?

May 08, 2025,01:50 PM IST

அமிர்தசரஸ்:  இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் வீசியதாக கூறப்படும் ராக்கெட் பாகங்கள், அமிர்தசரஸ் அருகே கிராமப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் (PoK) உள்ள தீவிரவாத அமைப்புகள் மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள துதலா, ஜெதுவால், பந்தேர் ஆகிய மூன்று கிராமங்களில் அடையாளம் தெரியாத ஏவுகணை பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது உள்ளூர் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. 


புதன்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. அமிர்தசரஸ் ரூரல் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மனீந்தர் சிங் அளித்த பேட்டியில், கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் ராக்கெட்டுகள் என்று உறுதிப்படுத்தினார். உடனடியாக இந்திய ராணுவம் உஷார்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சிறப்பு குழு விரைந்து வந்து ஏவுகணைகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மனீந்தர் சிங் இது குறித்து கூறுகையில், எங்கள் குழுக்கள் அந்த பகுதிகளை பாதுகாத்து ராணுவத்திற்கு தகவல் கொடுத்தன. ராணுவ நிபுணர்கள் விரைந்து வந்து அந்த பொருள்கள் ஏவுகணைகள் என்பதை உறுதி செய்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை, உயிர் சேதமும் இல்லை என்று தெரிவித்தார்.


அமிர்தசரஸில் அதிகாலை 1:02 மணி முதல் 1:09 மணி வரை ஆறு முறை பலத்த வெடி சத்தம் கேட்டதாக செய்திகள் வந்தன. இந்த சத்தங்கள் ஏவுகணை சம்பவத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற யூகங்கள் கிளம்பியுள்ளன. இதையடுத்து, அதிகாரிகள் உடனடியாக நகரத்தில் மின்சாரத்தை நிறுத்தி, இருட்டடிப்பு செய்தனர்.


இந்த சத்தங்கள் சோனிக் பூம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று காவல்துறை முதலில் கூறியது. ஆனால், ஏவுகணைகள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் இதுவரை கொடுக்கப்படவில்லை. அமிர்தசரஸில் அன்று இரவு இரண்டு முறை மின்சாரம் தடைபட்டது. முதல் முறை இரவு 10:30 மணி முதல் 11:00 மணி வரை மின்சாரம் தடைபட்டது. இரண்டாவது முறை அதிகாலை 1:56 மணிக்கு மின்சாரம் தடைபட்டது. இந்த தடை சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது. அதிகாலை 4:30 மணிக்கு மின்சாரம் முழுமையாக சரி செய்யப்பட்டது.


சம்பவம் நடந்த கிராமங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Asha Bhosle: ஓ பட்டர்பிளை.. நீ பாடிய பாடல்களுக்கு நன்றி.. மறக்க முடியாத செண்பகமே செண்பகமே!

news

எங்க வீட்டு செல்லக் குட்டி.. செல்லச் சிரிப்பால் சவால்களை தாண்டி.. 3 வயதில்!

news

Sanju Samson Century: சேப்பாக்கத்தில் சிறப்பான சம்பவம்.. பவுலிங்கிலும் கலக்கிய சிஎஸ்கே!

news

Rathi's Kitchen: நாக்கு சப்புக் கொட்டி சாப்பிட வைக்கும்.. நார்ச் சத்து மிகுந்த துவையல்!

news

Thangalakshmi Short Story: உண்மை என்பது இவ்வுலகில் இல்லை

news

1300 அடியார்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிகப் பயணம்!

news

நேரமாகி விட்டது.. சீக்கிரம் ரெடியாகி வா.. மெல்லிய பூங்காற்று.. (2)

news

Wonder Words: ஏன்.. எப்படி .. எதற்கு?.. விந்தையான வார்த்தைகள்!

news

நீங்களும் ஆகலாம்.. கலாம்.. அப்துல் கலாமின் காவியக் கவிதை!

அதிகம் பார்க்கும் செய்திகள்