டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்திக் கைதான பெண் நீலம் கைது செய்யப்பட்டபோது கூறிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
இன்று நாடாளுமன்றத்திற்கு உள்ளே இருவரும், வெளியே இருவரும் என்று நான்கு பேர் சேர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டனர். உள்ளே புகுந்த இரு இளைஞர்கள் லோக்சபாவுக்குள் ஊடுறுவி எம்.பிக்களை அதிர வைத்து விட்டனர். அதேபோல அமோல் ஷிண்டே மற்றும் நீலம் ஆகிய இருவர் வெளியே போராட்டம் நடத்தி அதிர வைத்து விட்டனர்.
போராட்டம் நடத்தி பிடிபட்ட பெண் நீலம் ஆவேசமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

எனது பெயர் நீலம். மத்திய அரசு எங்களுக்கு எதிராக அடக்குமுறைகளைக் கையாளுகிறது. எங்களது உரிமைகளை எங்களால் கூற முடியவில்லை. போலீஸார் தடியடி நடத்துகின்றனர். எங்களை சிறையில் தள்ளுகிறார்கள். எங்களை சித்திரவதை செய்கின்றனர். எங்களது உரிமைகளுக்காக பேச இங்கு ஊடகங்கள் இல்லை.
நாங்கள் எந்த அமைப்புடனும், குழுவுடனும் தொடர்புடையவர்கள் கிடையாது. நாங்கள் சாதாரண மக்கள். நாங்கள் மாணவர்கள். நாங்கள் வேலையில்லாதவர்கள்.
எங்களது பெற்றோர்கள் விவசாயிகள், கடினமாக உழைக்கும் கூலித் தொழிலாளர்கள், சாதாரண கடை வைத்து நடத்துபவர்கள். ஆனால் எங்களது குமுறலைக் கேட்க இங்கு யாரும் இல்லை. எங்களது குரல்கள் தொடர்ந்து நசுக்கப்படுகின்றன.
சர்வாதிகாரம் நீடிக்காது.. சர்வாதிகாரத்தை நிறுத்துங்கள். பாரத் மாதா கி ஜெய் என்று அவர் ஆவேசமாக பேசியபடி போலீஸாருடன் போனார்.
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!
மழையினால் சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்..திமுக அரசின் புதிய சாதனை:அன்புமணி ராமதாஸ்
பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்
நடித்தாலே நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது... இது ரொம்ப கொடுமையானது: சீமான்!
கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் திமுக தான் : முதல்வர் முக ஸ்டாலின்!
மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.. சீமான் கண்டனம்
ராகுல்காந்தி என் மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}