பழனியை சேர்ந்த மாணவி முதல் மதிப்பெண் பெற்று சாதனை.. வாழ்த்து மழையில் நனையும் ஓவியாஞ்சலி..!

May 08, 2025,11:35 AM IST

சென்னை: பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், பழனியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி 600க்கு 599 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.


தமிழகம் முழுவதும் மாணவர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று முன்னிலையில் உள்ளன. இந்த ஆண்டு மொத்தம் 95.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிலும் அரசு பள்ளி மாணவர்கள் 91.94 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.


குறிப்பாக, முதன்மை பாடமான கணினி அறிவியலில் 9,536 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வேதியலில் 3,181  மாணவர்களும், கணிதத்தில் 3,022 மாணவர்களும், தமிழில் 135 மாணவர்களும், வணிகவியலில் 1,624 மாணவர்களும் 100% மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.




அதேபோல் மொழி பாடங்களான தமிழில் 99.20% (ஆண்கள் 98.72 சதவிகிதம், பெண்கள் 99.62 சதவிகிதம்), ஆங்கிலத்தில் 98.50(ஆண்கள் 97.90 சதவிகிதம், பெண்கள் 99.04 சதவீதம்) சதவிகிதமும் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


இந்த நிலையில் பழனியை சேர்ந்த ஓவியாஞ்சலி என்ற மாணவி முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.600க்கு 599 மதிப்பெண்களை பெற்றுள்ளார். தமிழ், வணிகவியல், பொருளியல், கணக்குப் பதிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என அனைத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளார். ஆங்கிலத்தில் மட்டும் ஒரே ஒரு மதிப்பெண்கள் குறைந்து 99 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இந்த மாணவிக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

விஷாலை திருமணம் செய்யப் போகிறேன்.. ஆகஸ்ட் 29ல் கல்யாணம்.. அறிவித்தார் சாய் தன்ஷிகா

news

தமிழகத்தில் இயல்பை விட 90 % அதிக மழை பெய்துள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்பது தெரியவில்லை: விசிக தலைவர் திருமாவளவன்!

news

கர்னல் சோஃபியா குறித்த சர்ச்சை கருத்து... அமைச்சரின் மன்னிப்பை ஏற்க முடியாது... உச்சநீதிமன்றம்!

news

Operation Sindoor: பொற்கோவிலை தாக்கும் பாகிஸ்தான் திட்டத்தை.. இந்தியா முறியத்தது எப்படி?

news

வயதான தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது... போராட்டம் கைவிடப்படுகிறது... அண்ணாமலை அறிவிப்பு!

news

மீண்டும் மீண்டுமா.. சிங்கப்பூரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

news

வேளாண்துறை வீழ்ச்சி தான் திமுக ஆட்சியின் சாதனையா?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்