சென்னை: பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், பழனியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி 600க்கு 599 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் மாணவர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று முன்னிலையில் உள்ளன. இந்த ஆண்டு மொத்தம் 95.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிலும் அரசு பள்ளி மாணவர்கள் 91.94 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
குறிப்பாக, முதன்மை பாடமான கணினி அறிவியலில் 9,536 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வேதியலில் 3,181 மாணவர்களும், கணிதத்தில் 3,022 மாணவர்களும், தமிழில் 135 மாணவர்களும், வணிகவியலில் 1,624 மாணவர்களும் 100% மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

அதேபோல் மொழி பாடங்களான தமிழில் 99.20% (ஆண்கள் 98.72 சதவிகிதம், பெண்கள் 99.62 சதவிகிதம்), ஆங்கிலத்தில் 98.50(ஆண்கள் 97.90 சதவிகிதம், பெண்கள் 99.04 சதவீதம்) சதவிகிதமும் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் பழனியை சேர்ந்த ஓவியாஞ்சலி என்ற மாணவி முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.600க்கு 599 மதிப்பெண்களை பெற்றுள்ளார். தமிழ், வணிகவியல், பொருளியல், கணக்குப் பதிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என அனைத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளார். ஆங்கிலத்தில் மட்டும் ஒரே ஒரு மதிப்பெண்கள் குறைந்து 99 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இந்த மாணவிக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஒவ்வொரு குடும்பத்திற்கு கருணைத் தொகையாக ரூ10,000 வழங்கப்படும்:எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு
இயற்கையுடன் போராடி வருகிறார் தோழர் நல்லகண்ணு.. சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன்
வேலூர் விஜய் கூட்டத்துக்கு அனுமதி கொடுப்பதில் தாமதமா?.. போலீஸ் தந்த விளக்கம்
ரயில் சேவை ரத்தால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது: கனிமொழி
இனி எண்ட ஸ்டேட் கேரளா இல்ல .. கேரளம்.. பெயர் மாற்றத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தென் தமிழகத்தில் நாளை இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்... எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை!
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்து ஆட்சி அமைத்தவர் ஜெயலலிதா: ஓ.பன்னீர்செல்வம்
யாரையும் காலி பண்ண வரவில்லை.. நல்ல விஷயங்களைச் செய்யவே வந்திருக்கிறேன்.. சிவகார்த்திகேயன்
{{comments.comment}}