சென்னை: பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், பழனியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி 600க்கு 599 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் மாணவர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று முன்னிலையில் உள்ளன. இந்த ஆண்டு மொத்தம் 95.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிலும் அரசு பள்ளி மாணவர்கள் 91.94 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
குறிப்பாக, முதன்மை பாடமான கணினி அறிவியலில் 9,536 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வேதியலில் 3,181 மாணவர்களும், கணிதத்தில் 3,022 மாணவர்களும், தமிழில் 135 மாணவர்களும், வணிகவியலில் 1,624 மாணவர்களும் 100% மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

அதேபோல் மொழி பாடங்களான தமிழில் 99.20% (ஆண்கள் 98.72 சதவிகிதம், பெண்கள் 99.62 சதவிகிதம்), ஆங்கிலத்தில் 98.50(ஆண்கள் 97.90 சதவிகிதம், பெண்கள் 99.04 சதவீதம்) சதவிகிதமும் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் பழனியை சேர்ந்த ஓவியாஞ்சலி என்ற மாணவி முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.600க்கு 599 மதிப்பெண்களை பெற்றுள்ளார். தமிழ், வணிகவியல், பொருளியல், கணக்குப் பதிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என அனைத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளார். ஆங்கிலத்தில் மட்டும் ஒரே ஒரு மதிப்பெண்கள் குறைந்து 99 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இந்த மாணவிக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
Vijay Record: 828 நாட்களில்.. இதுவே முதல் முறை...தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய விஜய்!
CM Vijay: எல்லாமே 10.. விஜய்யின் பதவியேற்பு விழா சென்டிமென்ட்டை கவனிச்சீங்களா?
கறுப்பு நிற கோட்டில்.. வித்தியாசமான கெட்டப்பில் பதவியேற்பு விழாவில் விஜய்!
CM Joseph Vijay: "C ஜோசப் விஜய் எனும் நான்"... தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்!
Vijay Sarkar: இது தான் விஜய் சர்க்கார்.. 9 அமைச்சர்களுடன் உற்சாக பதவியேற்பு.. உற்சாகத்தில் தவெக!
Assembly Protem Speaker: தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா பதவியேற்றார்!
MK Stalin Attacks: எடுத்த எடுப்பிலேயே பணம் இல்லைன்னு பேச ஆரம்பிக்காதீங்க விஜய்.. மு.க.ஸ்டாலின்
CM Vijay Speech: கஜானாவில் என்ன இருக்கோ.. முதல்ல வெள்ளை அறிக்கை.. பிறகுதான் வேலையே.. விஜய்
வாடும் மனம் வாசம் பெறும் அம்மா சொல்லும் ஒரு சொல்லில்...!
{{comments.comment}}