ஆசையில் மூழ்கும் உலகம்!

Apr 17, 2026,05:00 PM IST

- பாவலர் மாயோன்மங்கை


என்ன கொண்டு வந்தாய் நீ

அதை  உன்னுடனே

எடுத்துச் செல்ல


இறைவன்   மனிதனுக்காகக்

கூறிய வாசகம்  மனிதா

ஆசையை ஒழி


ஆசையே அலை போலே

உலகமே அதன் மேலே

ஆடும் ஓடங்களாக


சாப்பாட்டுக்கு உப்பு  பத்தலயே  

சொல்லுகிறோமே   

உணவு மேல் ருசி  ஆசை




நாளும் நவநாகரீக உடை உடுத்தனும்  

வெளியில் செல்ல வேண்டும்

இதுவும்  ஆசைதான்


அடுத்த வீடு எதிர்த்த வீடு

பக்கத்துவீடு போல்  நாமும்  படோபடமாக

வாழனும்  இதுவும் ஆசைதான்


போரில் ஒருவருக்கொருவர்

வெல்லவேண்டும் 

பல்லுயிர் பலியானாலும் என் ஆட்சி  நிலவ வேண்டும்

மண் ஆசை


உலகச் சக்கரம் ஒன்றையொன்று

இழந்து தான் மற்றதைப் பெறுகிறது

இதற்குக்காரணம் ஆசைதான்


புத்தர்  துன்பத்திற்குக் காரணம்  எனக் கூறியது

ஆசையைத்தான்


வாழ்வதற்கு அடிப்படை

உழைப்புதான்   உழைப்போர்க்கு  நாளும்சம்பளம்  பெறனும்

இது ஆசைதான்


அளவோடு வைக்கவேண்டும் பற்றுக்களை

மீறும்போது அழிவு தருவது

பேராசை தானே


போதும் என்ற மூன்றெழுத்து 

உயரச் செய்யும் 

பிறகெதற்கு ஆசை


பொய் பேச திருட  உயிரைக் கொல்ல 

அடுத்தனைப் பழித்தல் தீயபழக்கத்தை

உண்டாக்குவது  இதே

ஆசைதான்


உலகமே  பொறாமை

விட்டுக்கொடாமை  ஒருவரைக் கீழே தள்ளி

அவர்மேல் நடக்கிறது

ஆசையாலே


ஆடையில்லாதவன்

அரை மனிதன் என்பர்.

ஆனால் இந்தக் காலச்

சூழல் ஆசையில்லாதவன்

மனிதனே இல்லை!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மசோதாக்களை நிறைவேற விட மாட்டோம் - தொகுதி மறுவரையறைக்கு எதிராக ராகுல் காந்தி ஆவேச பேச்சு

news

ஏன் இந்த அவசரம்?...பார்லிமென்டில் பாஜக.,வை வெளுத்து வாங்கிய கனிமொழி

news

கரூரில் பரபரப்பு...செந்தில் பாலாஜியின் நண்பர் வீடுகளில் ஐடி ரெய்டு

news

தேவகோட்டை பள்ளியில் ஒளி ஏற்றுதல் விழா.. நெகிழ்ச்சியுடன் விடைபெற்ற 8ம் வகுப்பு மாணவர்கள்!

news

“நாம் பேசும் AI… யார் அவர்கள்?”.. செயற்கை நுண்ணறிவின் எழுச்சிக் கதை

news

Nadavavi Kinaru: காஞ்சிபுரத்தில் இருக்கும் அதிசய நடவாவி கிணறு .. அப்படீன்னா என்ன?

news

வெப்பமே என் வெப்பமே...!

news

Chettinadu Kitchen: மணிமாவின்.. செட்டிநாட்டு அடுப்படியின் அதிரடி.. பன் பர்பி

news

Thangalakshmi Poems: ஒரு சூரியன்.. ஒரு அந்திவானம்.. சில கவிதைத் துளிகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்