ஆசையில் மூழ்கும் உலகம்!

Apr 17, 2026,05:00 PM IST

- பாவலர் மாயோன்மங்கை


என்ன கொண்டு வந்தாய் நீ

அதை  உன்னுடனே

எடுத்துச் செல்ல


இறைவன்   மனிதனுக்காகக்

கூறிய வாசகம்  மனிதா

ஆசையை ஒழி


ஆசையே அலை போலே

உலகமே அதன் மேலே

ஆடும் ஓடங்களாக


சாப்பாட்டுக்கு உப்பு  பத்தலயே  

சொல்லுகிறோமே   

உணவு மேல் ருசி  ஆசை




நாளும் நவநாகரீக உடை உடுத்தனும்  

வெளியில் செல்ல வேண்டும்

இதுவும்  ஆசைதான்


அடுத்த வீடு எதிர்த்த வீடு

பக்கத்துவீடு போல்  நாமும்  படோபடமாக

வாழனும்  இதுவும் ஆசைதான்


போரில் ஒருவருக்கொருவர்

வெல்லவேண்டும் 

பல்லுயிர் பலியானாலும் என் ஆட்சி  நிலவ வேண்டும்

மண் ஆசை


உலகச் சக்கரம் ஒன்றையொன்று

இழந்து தான் மற்றதைப் பெறுகிறது

இதற்குக்காரணம் ஆசைதான்


புத்தர்  துன்பத்திற்குக் காரணம்  எனக் கூறியது

ஆசையைத்தான்


வாழ்வதற்கு அடிப்படை

உழைப்புதான்   உழைப்போர்க்கு  நாளும்சம்பளம்  பெறனும்

இது ஆசைதான்


அளவோடு வைக்கவேண்டும் பற்றுக்களை

மீறும்போது அழிவு தருவது

பேராசை தானே


போதும் என்ற மூன்றெழுத்து 

உயரச் செய்யும் 

பிறகெதற்கு ஆசை


பொய் பேச திருட  உயிரைக் கொல்ல 

அடுத்தனைப் பழித்தல் தீயபழக்கத்தை

உண்டாக்குவது  இதே

ஆசைதான்


உலகமே  பொறாமை

விட்டுக்கொடாமை  ஒருவரைக் கீழே தள்ளி

அவர்மேல் நடக்கிறது

ஆசையாலே


ஆடையில்லாதவன்

அரை மனிதன் என்பர்.

ஆனால் இந்தக் காலச்

சூழல் ஆசையில்லாதவன்

மனிதனே இல்லை!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்

news

அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்