பாகிஸ்தான் தொடர்ந்து 3வது நாளாக ட்ரோன் தாக்குதல்.. அவசர அவசரமாக மக்கள் வெளியேற்றம்!

May 10, 2025,10:58 AM IST

டெல்லி: பாகிஸ்தான் தொடர்ந்து மூன்றாவது நாளாக ட்ரோன் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதனை முறியடித்து இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக நேற்று நள்ளிரவில் விடிய விடிய 26 இடங்களில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதை அடுத்து வான் பாதுகாப்பு அமைப்பு நடுவானிலேயே இடைமறித்து  அழித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.


இந்தியாவில் போர்பதற்ற சூழல் நிலவிவரும் நிலையில், பாகிஸ்தான் ட்ரோன்களை பயன்படுத்தி வான் தாக்குதல் நடத்த முயற்சித்து வருவதால், வான் பாதுகாப்பு அமைப்பு தீவிரமாக கண்காணித்து வருகிறது. குறிப்பாக ஜம்மு பகுதியில் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.


நேற்று இரவு  பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே உள்ள 26 நகரங்கள் மீது ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. இதனை நடு வானிலேயே இடைமறித்து பாதுகாப்பு படையினர் அளித்துள்ளனர். அதே போல் பதான்கோட் விமான  படைத்தளத்தை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தது. இந்த தாக்குதலில் ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்ட மேம்பாட்டு குழு கூடுதல் ஆணையர் ராஜ்குமார் தம்பா உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.




அதே சமயத்தில் பதான்கோட், பூஜ்ச், ரஜோரி பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து குண்டுவெடிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.


இந்த நிலையில் தொடர்ந்து பதற்றம்  நீடித்து வருவதால் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலால் தொடர்ந்து குண்டுவெடிப்புகளால்  ஜம்மு காஷ்மீர்,பூஜ்ச் ரஜோரியில்  வீடுகள் சேதமடைந்தன. வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.மேலும், இந்த தாக்குதலில் காயமடைந்த மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


அதே சமயத்தில் டெல்லியில் மருத்துவமனைகள் யார் நிலையில் உள்ளதாகவும், படுக்கை வசதிகள் தேவையான அளவு மருந்துகள் கையிருப்பு உள்ளதாகவும் முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் நாளை திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

தெறிக்க விட்ட 'Thalaivar 174'டீசர்...ஹீரோ ரஜினியா? கமலா?...இவ்வளவு விஷயம் பண்ணிருக்காங்கலே

news

சீமான் போட்டியிடப் போவது எங்கே.. திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களை அறிவிக்கிறார்!

news

கே. என். நேரு வசம் 41 தொகுதிகள் மட்டுமல்ல.. திமுகவின் மொத்தக் கோட்டையுமே இருக்கு!

news

திமுக அமைத்துள்ள 7 பேர் குழு...கூட்டணி கட்சிகளிடம் இவர்கள் என்ன பேசுவார்கள்?

news

கமல்ஹாசனின் நம்பிக்கை.. ரஜினிகாந்த்தின் பெருந்தன்மை.. பெயரில் என்ன இருக்கு?

news

என்ன சார் சொல்ல வர்றீங்க?...திமுக கூட்டணி பற்றி கமல் சொன்ன பதில்...குழம்பிய செய்தியாளர்கள்

news

47 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் கமல்ஹாசன் - ரஜினிகாந்த்!

news

தாய் மொழியாகிய தமிழ் மொழியே நம் தமிழரின் தனி அடையாளமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்