பாகிஸ்தான் தொடர்ந்து 3வது நாளாக ட்ரோன் தாக்குதல்.. அவசர அவசரமாக மக்கள் வெளியேற்றம்!

May 10, 2025,10:58 AM IST

டெல்லி: பாகிஸ்தான் தொடர்ந்து மூன்றாவது நாளாக ட்ரோன் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதனை முறியடித்து இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக நேற்று நள்ளிரவில் விடிய விடிய 26 இடங்களில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதை அடுத்து வான் பாதுகாப்பு அமைப்பு நடுவானிலேயே இடைமறித்து  அழித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.


இந்தியாவில் போர்பதற்ற சூழல் நிலவிவரும் நிலையில், பாகிஸ்தான் ட்ரோன்களை பயன்படுத்தி வான் தாக்குதல் நடத்த முயற்சித்து வருவதால், வான் பாதுகாப்பு அமைப்பு தீவிரமாக கண்காணித்து வருகிறது. குறிப்பாக ஜம்மு பகுதியில் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.


நேற்று இரவு  பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே உள்ள 26 நகரங்கள் மீது ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. இதனை நடு வானிலேயே இடைமறித்து பாதுகாப்பு படையினர் அளித்துள்ளனர். அதே போல் பதான்கோட் விமான  படைத்தளத்தை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தது. இந்த தாக்குதலில் ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்ட மேம்பாட்டு குழு கூடுதல் ஆணையர் ராஜ்குமார் தம்பா உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.




அதே சமயத்தில் பதான்கோட், பூஜ்ச், ரஜோரி பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து குண்டுவெடிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.


இந்த நிலையில் தொடர்ந்து பதற்றம்  நீடித்து வருவதால் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலால் தொடர்ந்து குண்டுவெடிப்புகளால்  ஜம்மு காஷ்மீர்,பூஜ்ச் ரஜோரியில்  வீடுகள் சேதமடைந்தன. வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.மேலும், இந்த தாக்குதலில் காயமடைந்த மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


அதே சமயத்தில் டெல்லியில் மருத்துவமனைகள் யார் நிலையில் உள்ளதாகவும், படுக்கை வசதிகள் தேவையான அளவு மருந்துகள் கையிருப்பு உள்ளதாகவும் முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

news

ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு

news

ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்

news

ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

news

அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக

news

விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதை நான் நம்பவில்லை: தமிழிசை செளந்தரராஜன்

news

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக வெளியீட்டிற்குத் தடை

news

மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுக: அண்ணாமலை காட்டம்

news

தமிழகத்தில் ஆவில் பால் பச்சை பாக்கெட் விலை உயர்வா? ஆவின் நிர்வாகம் விளக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்