டெல்லி: பாகிஸ்தான் தொடர்ந்து மூன்றாவது நாளாக ட்ரோன் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதனை முறியடித்து இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக நேற்று நள்ளிரவில் விடிய விடிய 26 இடங்களில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதை அடுத்து வான் பாதுகாப்பு அமைப்பு நடுவானிலேயே இடைமறித்து அழித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் போர்பதற்ற சூழல் நிலவிவரும் நிலையில், பாகிஸ்தான் ட்ரோன்களை பயன்படுத்தி வான் தாக்குதல் நடத்த முயற்சித்து வருவதால், வான் பாதுகாப்பு அமைப்பு தீவிரமாக கண்காணித்து வருகிறது. குறிப்பாக ஜம்மு பகுதியில் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.
நேற்று இரவு பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே உள்ள 26 நகரங்கள் மீது ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. இதனை நடு வானிலேயே இடைமறித்து பாதுகாப்பு படையினர் அளித்துள்ளனர். அதே போல் பதான்கோட் விமான படைத்தளத்தை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தது. இந்த தாக்குதலில் ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்ட மேம்பாட்டு குழு கூடுதல் ஆணையர் ராஜ்குமார் தம்பா உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயத்தில் பதான்கோட், பூஜ்ச், ரஜோரி பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து குண்டுவெடிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலால் தொடர்ந்து குண்டுவெடிப்புகளால் ஜம்மு காஷ்மீர்,பூஜ்ச் ரஜோரியில் வீடுகள் சேதமடைந்தன. வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.மேலும், இந்த தாக்குதலில் காயமடைந்த மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே சமயத்தில் டெல்லியில் மருத்துவமனைகள் யார் நிலையில் உள்ளதாகவும், படுக்கை வசதிகள் தேவையான அளவு மருந்துகள் கையிருப்பு உள்ளதாகவும் முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.
Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு
1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்
அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!
சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3
தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!
பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!
என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...
பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!
{{comments.comment}}