சிறைக்குள் இருந்தபடியே.. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வேந்தர் பதவிக்கு போட்டியிடும் இம்ரான் கான்!

Aug 20, 2024,05:32 PM IST

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தற்போது சிறைவாசம் அனுபவித்து வருபவருமான இம்ரான் கான், புகழ் பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தர் (chancellor) பதவிக்கு போட்டியிடுகிறார்.


பாகிஸ்தான் பிரதமராக 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் இம்ரான் கான். ஆட்சி மாறி, காட்சியும் மாறி, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளனர். பலமுறை கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.


இந்த நிலையில் புகழ் பெற்ற இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு இம்ரான் கான் விண்ணப்பித்துள்ளாராம்.  விண்ணப்பத்தை தயாரிக்குமாறு தனது வக்கீல்களுக்கு அவர் அறிவுறுத்தியிரு்நதார் என்று  இங்கிலாந்தில் உள்ள அவரது கட்சி செய்தித் தொடர்பாளர் ஜுல்பிகர் புகாரி கூறியுள்ளார். இந்த பதவியானது சம்பளத்துடன் கூடியது கிடையாது. வெறும் கெளரவப் பதவிதான் என்பது குறிப்பிடத்தக்கது. 




இங்கிலாந்து நாட்டின் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினரான கிறிஸ் பேட்டன் கடந்த பிப்ரவரி மாதம் தனது சான்சலர் பதவியை ராஜினாமா செய்தார். அந்தப் பதவிக்குத்தான் ஆள் எடுக்கவுள்ளனர். அதற்குத்தான் இம்ரான் கான் விண்ணப்பித்துள்ளார். ஹாங்காங்கின் கடைசி பிரிட்டிஷ் கவர்னராக இருந்தவர் கிறிஸ் பேட்டன் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தப் பதவியானது 10 வருட கால ஆயுள் கொண்டது. இந்தப் பதவிக்கு போட்டியிடுவோர் யார் என்ற பட்டியல் அக்டோபர் மாதத்திற்கு மேல்தான் வெளியாகும். அதன் பின்னர் அக்டோபர் கடைசியில் தேர்தல் நடைபெறும். அதில் வெற்றி பெறுபவர் சான்சலாரக அறிவிக்கப்படுவார். இம்ரான் கான் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கடந்த 1975ம் ஆண்டு அரசியல், பொருளாதாரம், தத்துவியல் பட்டப் படிப்பு படித்து பட்டம் வென்றவர் என்பது நினைவிருக்கலாம்.


ஒரு காலத்தில்  ரோமியோ வாழ்க்கை வாழ்ந்தவர் இம்ரான் கான். குறிப்பாக கிரிக்கெட் வீரராக வலம் வந்தபோது பலருடனும் இணைத்து கிசுகிசுக்கப்பட்டவர். 3 முறை திருமணம் செய்தவரும் கூட. அதில் ஒருவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெமிமா கோல்ட்ஸ்மித். பின்னர் அரசியலுக்குத் திரும்பினார். 


ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக சான்சலராக இம்ரான் கான் தேர்ந்தெடுக்கப்பட்டால், அந்தப் பதவிக்கு வரும் முதல் ஆசியர் என்ற பெருமை அவருக்குக் கிடைக்கும். 


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி

news

தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

அதிகம் பார்க்கும் செய்திகள்