இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தற்போது சிறைவாசம் அனுபவித்து வருபவருமான இம்ரான் கான், புகழ் பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தர் (chancellor) பதவிக்கு போட்டியிடுகிறார்.
பாகிஸ்தான் பிரதமராக 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் இம்ரான் கான். ஆட்சி மாறி, காட்சியும் மாறி, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளனர். பலமுறை கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
இந்த நிலையில் புகழ் பெற்ற இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு இம்ரான் கான் விண்ணப்பித்துள்ளாராம். விண்ணப்பத்தை தயாரிக்குமாறு தனது வக்கீல்களுக்கு அவர் அறிவுறுத்தியிரு்நதார் என்று இங்கிலாந்தில் உள்ள அவரது கட்சி செய்தித் தொடர்பாளர் ஜுல்பிகர் புகாரி கூறியுள்ளார். இந்த பதவியானது சம்பளத்துடன் கூடியது கிடையாது. வெறும் கெளரவப் பதவிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து நாட்டின் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினரான கிறிஸ் பேட்டன் கடந்த பிப்ரவரி மாதம் தனது சான்சலர் பதவியை ராஜினாமா செய்தார். அந்தப் பதவிக்குத்தான் ஆள் எடுக்கவுள்ளனர். அதற்குத்தான் இம்ரான் கான் விண்ணப்பித்துள்ளார். ஹாங்காங்கின் கடைசி பிரிட்டிஷ் கவர்னராக இருந்தவர் கிறிஸ் பேட்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பதவியானது 10 வருட கால ஆயுள் கொண்டது. இந்தப் பதவிக்கு போட்டியிடுவோர் யார் என்ற பட்டியல் அக்டோபர் மாதத்திற்கு மேல்தான் வெளியாகும். அதன் பின்னர் அக்டோபர் கடைசியில் தேர்தல் நடைபெறும். அதில் வெற்றி பெறுபவர் சான்சலாரக அறிவிக்கப்படுவார். இம்ரான் கான் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கடந்த 1975ம் ஆண்டு அரசியல், பொருளாதாரம், தத்துவியல் பட்டப் படிப்பு படித்து பட்டம் வென்றவர் என்பது நினைவிருக்கலாம்.
ஒரு காலத்தில் ரோமியோ வாழ்க்கை வாழ்ந்தவர் இம்ரான் கான். குறிப்பாக கிரிக்கெட் வீரராக வலம் வந்தபோது பலருடனும் இணைத்து கிசுகிசுக்கப்பட்டவர். 3 முறை திருமணம் செய்தவரும் கூட. அதில் ஒருவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெமிமா கோல்ட்ஸ்மித். பின்னர் அரசியலுக்குத் திரும்பினார்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக சான்சலராக இம்ரான் கான் தேர்ந்தெடுக்கப்பட்டால், அந்தப் பதவிக்கு வரும் முதல் ஆசியர் என்ற பெருமை அவருக்குக் கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் 23, புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ம் தேதி தேர்தல்.. மே 4ல் வாக்கு எண்ணிக்கை
TN Assembly Elections: தமிழ்நாட்டில் 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.. தேர்தல் ஆணையம்
தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்.. இதையெல்லாம் பின்பற்றணும்!
விஜய் பையில் கத்திரிக்கோல்.. ஆதவ் அர்ஜூனாவிடம் மது பாட்டில்.. பரபரத்த சென்னை ஏர்போர்ட்!
எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிப்பு...தமிழகத்தில் வேகமெடுக்கும் அரசு பணிகள்
Iran-Israel War: மேற்கு ஆசியப் போர் எதிரொலி - சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு
10 ஏவுகணைகளை ஏவி அதிரடி காட்டிய கிம்மின் வடகொரியா.. கிலியில் அண்டை நாடுகள்!
வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களுக்கு மின்சார மானியம் அறிவிப்பு
மதுரை விமான நிலையம்.. திருத்தம்.. மதுரை சர்வதேச விமான நிலையம்.. மத்திய அரசு ஆணை!
{{comments.comment}}