இந்தியாவின் அதிரடியால் ஆட்டம் காணும் பாகிஸ்தான்.. பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி!

May 09, 2025,01:26 PM IST

இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருவதால், இரு நாடுகளின் பங்குச் சந்தைகளும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. பாகிஸ்தான் பங்குச் சந்தை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில்,  இந்திய சந்தைகள் சற்று தடுமாறினாலும், பெரிய அளவில் பாதிப்பு இல்லை.


இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ராணுவ ரீதியிலான பதற்றம் அதிகரித்ததால், இரு நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் தாக்கம் தெரியத் தொடங்கியுள்ளது. இது பாகிஸ்தானில் மோசமாக உள்ளது. இந்தியாவில் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது.


பாகிஸ்தான் பங்குச் சந்தை (PSX) வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. KSE-100 குறியீடு ஒரே நாளில் 6,400 புள்ளிகள் வரை சரிந்தது. இந்தியாவின் drone தாக்குதல்களால் கராச்சி, லாகூர் போன்ற நகரங்களில் முதலீட்டாளர்கள் பீதியடைந்தனர். இதனால் ஒரே நாளில் சுமார் 820 பில்லியன் ரூபாய் சந்தை மதிப்பு குறைந்தது. கடந்த மூன்று நாட்களில் PSX சந்தை மதிப்பு சுமார் 1.3 டிரில்லியன் ரூபாய் வரை குறைந்துள்ளது. 




ஆனால், இந்திய பங்குச் சந்தைகள் ஓரளவுக்கு நிலையாக உள்ளன. BSE சென்செக்ஸ் 680 புள்ளிகள் குறைந்து 79,654.73 ஆகவும், NSE நிஃப்டி 141.5 புள்ளிகள் குறைந்து 24,132.30 ஆகவும் இருந்தது. இந்த வேறுபாடு இரு நாடுகளின் பொருளாதார இடைவெளியையும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் காட்டுகிறது. பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், இந்தியாவின் சந்தைகள் வலுவான ஆதரவுடன் நிலையாக உள்ளன.


இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள பொருளாதார வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது. பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. மேலும் IMF அமைப்பின் உதவிக்காக காத்திருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ரீதியிலான பதற்றம் அதிகரித்துள்ளதால், பங்குச் சந்தைகள் தொடர்ந்து பாதிக்கப்படலாம். ஆனால், வியாழக்கிழமை நிலவரப்படி பாகிஸ்தானின் நிதி அமைப்பு இந்தியாவை விட மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!

news

Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!

news

அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!

news

கண்ணும் கண்ணும் நோக்கினால்!

news

அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?

news

ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)

அதிகம் பார்க்கும் செய்திகள்