இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருவதால், இரு நாடுகளின் பங்குச் சந்தைகளும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. பாகிஸ்தான் பங்குச் சந்தை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், இந்திய சந்தைகள் சற்று தடுமாறினாலும், பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ராணுவ ரீதியிலான பதற்றம் அதிகரித்ததால், இரு நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் தாக்கம் தெரியத் தொடங்கியுள்ளது. இது பாகிஸ்தானில் மோசமாக உள்ளது. இந்தியாவில் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது.
பாகிஸ்தான் பங்குச் சந்தை (PSX) வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. KSE-100 குறியீடு ஒரே நாளில் 6,400 புள்ளிகள் வரை சரிந்தது. இந்தியாவின் drone தாக்குதல்களால் கராச்சி, லாகூர் போன்ற நகரங்களில் முதலீட்டாளர்கள் பீதியடைந்தனர். இதனால் ஒரே நாளில் சுமார் 820 பில்லியன் ரூபாய் சந்தை மதிப்பு குறைந்தது. கடந்த மூன்று நாட்களில் PSX சந்தை மதிப்பு சுமார் 1.3 டிரில்லியன் ரூபாய் வரை குறைந்துள்ளது.

ஆனால், இந்திய பங்குச் சந்தைகள் ஓரளவுக்கு நிலையாக உள்ளன. BSE சென்செக்ஸ் 680 புள்ளிகள் குறைந்து 79,654.73 ஆகவும், NSE நிஃப்டி 141.5 புள்ளிகள் குறைந்து 24,132.30 ஆகவும் இருந்தது. இந்த வேறுபாடு இரு நாடுகளின் பொருளாதார இடைவெளியையும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் காட்டுகிறது. பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், இந்தியாவின் சந்தைகள் வலுவான ஆதரவுடன் நிலையாக உள்ளன.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள பொருளாதார வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது. பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. மேலும் IMF அமைப்பின் உதவிக்காக காத்திருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ரீதியிலான பதற்றம் அதிகரித்துள்ளதால், பங்குச் சந்தைகள் தொடர்ந்து பாதிக்கப்படலாம். ஆனால், வியாழக்கிழமை நிலவரப்படி பாகிஸ்தானின் நிதி அமைப்பு இந்தியாவை விட மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக் கூடாது.. மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்
மேகதாது அணை விவகாரம்... ஜூலை 23 டெல்லியில் ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
தவெக.,விற்கு எதிரான குதிரை பேர வழக்கு தள்ளுபடி...உச்ச நீதிமன்றம் அதிரடி
தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை: 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
ஆஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கான விசா கட்டணம் அதிரடி உயர்வு!
சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது ஏன்?...இபிஎஸ் சரமாரி கேள்வி
'தடை நியாயமானதே..' டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்க மறுப்பு!
ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து
முதல் முறை வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு இபிஎஃப் ரூ.15,000 ஊக்கத்தொகை
{{comments.comment}}