சென்னை: சென்னையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுவதைத் தொடர்ந்து மெட்ரோ ரயில் சேவை இன்று இரவு 12 மணி வரை செயல்படுகிறது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி, சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கான பயண போக்குவரத்து செலவின தொகையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஏற்றுள்ளது. எனவே, போட்டியை பார்த்துவிட்டு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை இன்று இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் போட்டிக்கான டிக்கெட்டை பயன்படுத்தி எந்தவித கட்டணமும் இல்லாமல் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம். 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
போட்டிக்கான டிக்கெட்டில் உள்ள பார்கோடு வைத்து தான் மெட்ரோ ரயிலில் ரசிகர்கள் பயணிக்க முடியும் என்பதால் டிக்கெட்டை கிரிக்கெட் ரசிகர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும் மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.
மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு செய்துள்ளது பிளஸ் இலவச பயணம் ஆகிய சலுகை, கிரிக்கெட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}