பாரீஸ் பாரா ஒலிம்பிக்கில்.. முத்திரை பதிக்கும் தமிழ்நாட்டு  வீராங்கனைகள்.. தொடர் பதக்க வேட்டை!

Sep 03, 2024,11:16 AM IST

பாரிஸ்: மாற்றுத்திறனாளிகளுக்கான பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி வெள்ளிப் பதக்கமும், மனிஷா வெண்கல பதக்கமும் வென்றுள்ள நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நித்யஸ்ரீ சிவன் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இதனால் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இது 17 வது போட்டியாகும். கடந்த ஆகஸ்ட் 28ஆம்  தேதி மிகப்பிரமாண்டமாக தொடங்கப்பட்ட இந்த பாரா ஒலிம்பிக் போட்டிகள் வரும் செப்டம்பர் எட்டாம் தேதி வரை நடைபெற உள்ளது. 167 உலக நாடுகளில் இருந்து மொத்தம் 4,400 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்க மகன் மாரியப்பன், துளசி மதி,  சிவராஜன் சோலைமலை, மனிஷா ராமதாஸ், நித்திய  ஸ்ரீ, கஸ்தூரி ராஜாமணி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.



இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசன் சீனா வீராங்கனையிடம் போட்டியிட்டு 17-21, 10-21 என்ற செட் கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதேபோல் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை மனுஷா ராமதாஸும் டென்மார்க் வீராங்கனையிடம் போட்டியிட்டு 21-12, 21-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றுள்ளார். 

இந்த நிலையில் மகளிர்  பேட்மிண்டன் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை நித்திய ஸ்ரீ சிவன் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இவர் இந்தோனேஷியா வீராங்கனை ரினா மர்லீனாவை 21 க்கு 16, 21 க்கு 16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றார்.

இந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 15 பதக்கங்களுடன், பதக்கப் பட்டியலில் 15வது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings vs RR: முன்னாள் அணிகளுக்கு எதிராக களம் இறங்கும் சஞ்சு சாம்சன், ஜடேஜா!

news

DMK Election Manifesto: இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன்: திமுக தேர்தல் அறிக்கையில் மெகா அறிவிப்பு

news

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.. திமுக தேர்தல் வாக்குறுதி

news

C Joseph Vijay... பெரம்பூர், திருச்சி கிழக்கு.. 2 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டி!

news

234 தொகுதிகளிலும் தவெக தனி ஆவர்த்தனம்.. வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் விஜய்!

news

Thiruvarur Aazhi Ther: திருவாரூர் தேர் – பலர் அறியாத சுவாரஸ்யமான தகவல்கள்!

news

புனித வாரம் தொடங்கியது.. தமிழ்நாடு முழுவதும் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்

news

திருவாரூரில் மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் அசைந்து வரும் ஆழித்தேர்!

news

முதல் தோட்டா.....!

அதிகம் பார்க்கும் செய்திகள்