பாரீஸ் பாரா ஒலிம்பிக்கில்.. முத்திரை பதிக்கும் தமிழ்நாட்டு  வீராங்கனைகள்.. தொடர் பதக்க வேட்டை!

Sep 03, 2024,11:16 AM IST

பாரிஸ்: மாற்றுத்திறனாளிகளுக்கான பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி வெள்ளிப் பதக்கமும், மனிஷா வெண்கல பதக்கமும் வென்றுள்ள நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நித்யஸ்ரீ சிவன் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இதனால் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இது 17 வது போட்டியாகும். கடந்த ஆகஸ்ட் 28ஆம்  தேதி மிகப்பிரமாண்டமாக தொடங்கப்பட்ட இந்த பாரா ஒலிம்பிக் போட்டிகள் வரும் செப்டம்பர் எட்டாம் தேதி வரை நடைபெற உள்ளது. 167 உலக நாடுகளில் இருந்து மொத்தம் 4,400 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்க மகன் மாரியப்பன், துளசி மதி,  சிவராஜன் சோலைமலை, மனிஷா ராமதாஸ், நித்திய  ஸ்ரீ, கஸ்தூரி ராஜாமணி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.



இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசன் சீனா வீராங்கனையிடம் போட்டியிட்டு 17-21, 10-21 என்ற செட் கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதேபோல் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை மனுஷா ராமதாஸும் டென்மார்க் வீராங்கனையிடம் போட்டியிட்டு 21-12, 21-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றுள்ளார். 

இந்த நிலையில் மகளிர்  பேட்மிண்டன் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை நித்திய ஸ்ரீ சிவன் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இவர் இந்தோனேஷியா வீராங்கனை ரினா மர்லீனாவை 21 க்கு 16, 21 க்கு 16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றார்.

இந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 15 பதக்கங்களுடன், பதக்கப் பட்டியலில் 15வது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி கிடையாது: புதுச்சேரி சபாநாயகர் செல்வம்

news

உக்ரைன் - ரஷ்யா போர்.. இதுக்கு என்ட் கார்டே கிடையாதாய்யா.. லேட்டாகுமாம்.. அமெரிக்கா அறிவிப்பு!

news

டிட்வா புயல் பாதிப்பு...ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம்: அமைச்சர் k.k.s.s.r.ராமச்சந்திரன் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாளை லீவு?.. என்ன காரணம் தெரியுமா.. வாங்க இதைப் படியுங்க!

news

மதகு சரி செய்யாததால் குழந்தை உயிரிழப்பு... திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது தெரியுமா?

news

திருநெல்வேலி மாவட்டத்தில்.. 2.33 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு!

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா.. பரணி தீபத்தின் விசேஷம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்