பாராலிம்பிக்ஸ் 2024.. ஜூடோவில்.. பதக்கம் வென்ற.. முதல் இந்திய வீரர் கபில் பர்மர்..!

Sep 06, 2024,11:34 AM IST

பாரிஸ்: பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஜுடோவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் கபில் பர்மர்.


பாரிஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17 வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கப்பட்டு செப்டம்பர் 8 வரை நடைபெற்று வருகிறது. இதில் இந்தியர்கள் 84 பேர் உட்பட மொத்தம் 4400 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். இதில் நேற்று நடைபெற்ற கிளப் எறிதல் போட்டியில் இந்திய வீரர் தரம்பிர் தங்கப் பதக்கத்தையும், பிரணவ் சர்மா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.




இதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கு 5 தங்கப்பதக்கம், ஒன்பது வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்கள் கிடைத்தது. 2024 பாரா ஒலிம்பிக் போட்டிகள் இந்தியா 24 பதக்கங்களை வென்று 13 வது இடத்திற்கு முன்னேறியது. 


இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஜூடோ போட்டியில் 60 கிலோ எடை பிரிவில் பிரேசில் வீரர் எலிட்டன் ஒலிவிராவை வீழ்த்தி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கபில் பர்மர்  வெண்கல பதக்கத்தை வென்றார். இவர் ஜூடோவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


கபில் பர்மர்  ஜூடோவில் வெண்கல பதக்கத்தை வென்ற நிலையில் மேலும் ஒரு பதக்கம் என இந்தியாவுக்கு 25 பதக்கங்கள் கிடைத்துள்ளன.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்