பாரிஸ்: பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஜுடோவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் கபில் பர்மர்.
பாரிஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17 வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கப்பட்டு செப்டம்பர் 8 வரை நடைபெற்று வருகிறது. இதில் இந்தியர்கள் 84 பேர் உட்பட மொத்தம் 4400 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். இதில் நேற்று நடைபெற்ற கிளப் எறிதல் போட்டியில் இந்திய வீரர் தரம்பிர் தங்கப் பதக்கத்தையும், பிரணவ் சர்மா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

இதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கு 5 தங்கப்பதக்கம், ஒன்பது வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்கள் கிடைத்தது. 2024 பாரா ஒலிம்பிக் போட்டிகள் இந்தியா 24 பதக்கங்களை வென்று 13 வது இடத்திற்கு முன்னேறியது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஜூடோ போட்டியில் 60 கிலோ எடை பிரிவில் பிரேசில் வீரர் எலிட்டன் ஒலிவிராவை வீழ்த்தி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கபில் பர்மர் வெண்கல பதக்கத்தை வென்றார். இவர் ஜூடோவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கபில் பர்மர் ஜூடோவில் வெண்கல பதக்கத்தை வென்ற நிலையில் மேலும் ஒரு பதக்கம் என இந்தியாவுக்கு 25 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் 23, புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ம் தேதி தேர்தல்.. மே 4ல் வாக்கு எண்ணிக்கை
TN Assembly Elections: தமிழ்நாட்டில் 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.. தேர்தல் ஆணையம்
தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்.. இதையெல்லாம் பின்பற்றணும்!
விஜய் பையில் கத்திரிக்கோல்.. ஆதவ் அர்ஜூனாவிடம் மது பாட்டில்.. பரபரத்த சென்னை ஏர்போர்ட்!
எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிப்பு...தமிழகத்தில் வேகமெடுக்கும் அரசு பணிகள்
Iran-Israel War: மேற்கு ஆசியப் போர் எதிரொலி - சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு
10 ஏவுகணைகளை ஏவி அதிரடி காட்டிய கிம்மின் வடகொரியா.. கிலியில் அண்டை நாடுகள்!
வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களுக்கு மின்சார மானியம் அறிவிப்பு
மதுரை விமான நிலையம்.. திருத்தம்.. மதுரை சர்வதேச விமான நிலையம்.. மத்திய அரசு ஆணை!
{{comments.comment}}