பாரிஸ்: பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஜுடோவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் கபில் பர்மர்.
பாரிஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17 வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கப்பட்டு செப்டம்பர் 8 வரை நடைபெற்று வருகிறது. இதில் இந்தியர்கள் 84 பேர் உட்பட மொத்தம் 4400 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். இதில் நேற்று நடைபெற்ற கிளப் எறிதல் போட்டியில் இந்திய வீரர் தரம்பிர் தங்கப் பதக்கத்தையும், பிரணவ் சர்மா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
இதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கு 5 தங்கப்பதக்கம், ஒன்பது வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்கள் கிடைத்தது. 2024 பாரா ஒலிம்பிக் போட்டிகள் இந்தியா 24 பதக்கங்களை வென்று 13 வது இடத்திற்கு முன்னேறியது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஜூடோ போட்டியில் 60 கிலோ எடை பிரிவில் பிரேசில் வீரர் எலிட்டன் ஒலிவிராவை வீழ்த்தி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கபில் பர்மர் வெண்கல பதக்கத்தை வென்றார். இவர் ஜூடோவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கபில் பர்மர் ஜூடோவில் வெண்கல பதக்கத்தை வென்ற நிலையில் மேலும் ஒரு பதக்கம் என இந்தியாவுக்கு 25 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அமைச்சராகப் பதவியேற்றார் மனோ தங்கராஜ்.. மீண்டும் பால்வளத்துறையே ஒதுக்கீடு செய்யப்பட்டது!
நான் கேட்டதும் ஷாருக்கான் செய்த அந்த செயல்.. நெகிழ்ச்சியுடன் நினைவு கூறும் வாசிம் அக்ரம்
வங்கி வேலைக்கு Goodbye சொல்லி விட்டு.. Audi கார் மூலம் பால் விற்பனை செய்யும் இளைஞர்.!
கடற்படைக்காக.. 26 ரபேல் போர் விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்கும் இந்தியா!
அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி.. ரைமிங்காக பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின்..!
தமிழ்நாட்டில் இன்று முதல் மே 4 வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
மே 4ல் அக்னி நட்சத்திரம்.. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ.. பாகிஸ்தான் youtube சேனல்களுக்கு மத்திய அரசு தடை
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
{{comments.comment}}