பாரிஸ்: தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேல் தொடர்ந்து மூன்றாவது வருடமாக பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதனால் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் மாரியப்பனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் பாரா ஒலிம்பிக் போட்டியில் ஆறாவது நாளான நேற்று தீப்தி ஜீவன்ஜி, ஷரத் குமார், மாரியப்பன் தங்கவேலு, அஜீத் சிங், சுந்தர் குர்ஜார் ஆகியோர் இந்தியாவுக்கு 5 பதக்கங்களை வென்று கொடுத்துள்ளனர்.

உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் அமெரிக்க வீரர் எல்ரா, இந்திய வீரர் ஷரத்குமார் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் அமெரிக்க வீரர் எல்ரா 1.94 மீட்டர் உயரத்தை அபாரமாக தாண்டி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதனைத் தொடர்ந்து தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேல் 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கல பதக்கத்தையும், ஷரத்குமார் 1.88 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
அதேபோல் பெண்களுக்கான 400 மீட்டர் (T20) ஓட்டத்தில் ஜீவன்ஜி வெண்கல பதக்கம் வென்றார். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (F46) போட்டியில் அஜீத் சிங் வெள்ளிப் பதக்கத்தையும், சுந்தர் குர்ஜார் வெண்கல பதக்கத்தையும் வென்றனர். இந்தியா நேற்று ஒரே நாளில் மட்டும் ஐந்து பதக்கங்களை வென்றது. இதுவரை மூன்று தங்கம், ஏழு வெள்ளி, பத்து வெண்கலம், என மொத்தம் 20 பதக்கங்கள் இந்தியாவிற்கு கிடைத்துள்ளன.
குறிப்பாக தொடர்ந்து மூன்று பாரா ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்று சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் மாரிமுத்து தங்கவேல். கடந்த மே மாதம் ஜப்பானில் நடந்த 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கவேல் முதல் தங்கம் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மாரியப்பன் தங்கவேலுவைப் பாராட்டி வெளியிட்டுள்ள செய்தியில், மூன்றாவது முறையாகப் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு வாழ்த்துகள். தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன் என்று வாழ்த்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எஞ்சாத வாட்டாயின் அடியார்க்கும் அடியேன்.. அரிவட்ட நாயனார்!
தேய்பிறை சஷ்டி விரதம்.. ஆறுமுகப் பெருமானுக்கு உரிய திதி!
விஜய் ஆட்சி அமைக்க முடியாமல்.. மறு தேர்தல் நடந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
விஜய்யை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. அபிஷேக் மனு சிங்வி
ஆட்சியமைக்க அழைக்கப்படாத விஜய்.. அடுத்து என்ன நடக்கும்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்
தவெகவை இந்தியா முழுவதும் அறிய வேண்டும் என்பதால் இந்தியில் பேசுகிறேன்.. கீர்த்தனா எம்எல்ஏ
தவெக குழப்பத்தால்.. திமுக, அதிமுகவை வைத்து கொடி கட்டிப் பறக்கும் வதந்திகள்!
ஜல்லிகட்டுப் போராட்டம் போல.. போராட தவெகவினர் திட்டமா?.. போலீஸ் கண்காணிப்பு அதிகரிப்பு
தவெக ஆட்சியமைக்கட்டும்.. தொந்தரவு செய்ய மாட்டோம்... திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}