- க.முருகேஸ்வரி
எங்கெங்கோ போகலாம்
ஏதேதோ ஆகலாம்
கடல் தாண்டி ஜெயிக்கலாம்
காலத்தையும் வெல்லலாம்
உயர் பதவி வகிக்கலாம்
ஏன் உலகையே நீ ஆளலாம்
என்னவெல்லாம் ஆனாலும்
உன் எண்ண ஓட்டத்தில்

பசுமரத்தாணி போல்
பத்திரமாய் பொதிந்திருக்கும்
பொக்கிஷம்
என்னவென்று எண்ணிப்பார் ......
சிலுக்குச் சட்ட போட்டுக்கிட்டு
சிலேட்டுப் பலகை தூக்கிக் கிட்டு
சிணுங்கி சிணுங்கி
அழுதுகிட்டு
ஒண்ணாப்பு சேர்ந்துபுட்டு
அஞ்சு வர அங்கணயே
அழகாகதான் படிச்சுபுட்டு
அஞ்சு மைல் தாண்டி
அப்பாவுடன் சைக்கிள்ல
ஆறாப்பு போய்க்கிட்டு
நவ்வாப் பழம்
நெல்லிக்காய்
நட்புகளோடு பகிர்ந்துகிட்டு
இன்னும் பல பள்ளிக்கூட நினைவுகளும்
ஒன்னு ரெண்டு சொல்லித் தந்த
ஒண்ணாப்பு டீச்சரின் அழகும்
எங்க ஊரு வாத்தியாரின் நினைவும்
நம் எண்ணம் முழுவதும்
வண்ணங்களால் நிறைந்திருக்கும்
பசுமரத்தாணி போல்
பசுமையாய்
நிலைத்திருக்கும்!!!!!!
(க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வயலாநல்லூர், பூவிருந்தவல்லி)
கார்கே விவகாரத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை
ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்
ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!
சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!
சமூகம் திருந்துவது எப்போது?
அன்புள்ள அப்பா!
ஒற்றைச் சொல்
கண்மணி!
{{comments.comment}}