பசுமரத்தாணி!

Jan 06, 2026,10:30 AM IST

- க.முருகேஸ்வரி


எங்கெங்கோ போகலாம்

ஏதேதோ ஆகலாம்

கடல் தாண்டி ஜெயிக்கலாம்

காலத்தையும் வெல்லலாம்

உயர் பதவி வகிக்கலாம்

ஏன் உலகையே நீ ஆளலாம்

என்னவெல்லாம் ஆனாலும்

உன் எண்ண ஓட்டத்தில்




பசுமரத்தாணி போல்

பத்திரமாய் பொதிந்திருக்கும்

பொக்கிஷம்

என்னவென்று எண்ணிப்பார் ......

சிலுக்குச் சட்ட போட்டுக்கிட்டு 

சிலேட்டுப் பலகை தூக்கிக் கிட்டு

சிணுங்கி சிணுங்கி 

அழுதுகிட்டு

ஒண்ணாப்பு சேர்ந்துபுட்டு

அஞ்சு வர அங்கணயே         

அழகாகதான் படிச்சுபுட்டு

அஞ்சு மைல் தாண்டி

அப்பாவுடன் சைக்கிள்ல

ஆறாப்பு போய்க்கிட்டு

நவ்வாப் பழம் 

நெல்லிக்காய் 

நட்புகளோடு பகிர்ந்துகிட்டு

இன்னும் பல பள்ளிக்கூட நினைவுகளும் 

ஒன்னு ரெண்டு சொல்லித் தந்த 

ஒண்ணாப்பு டீச்சரின் அழகும்

எண்ணும் எழுத்தும் கற்றுத்தந்த

எங்க ஊரு வாத்தியாரின் நினைவும்

நம் எண்ணம் முழுவதும் 

வண்ணங்களால் நிறைந்திருக்கும் 

பசுமரத்தாணி போல்

பசுமையாய்

நிலைத்திருக்கும்!!!!!!


(க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வயலாநல்லூர், பூவிருந்தவல்லி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

news

ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு

news

ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்

news

ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

news

அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக

news

விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதை நான் நம்பவில்லை: தமிழிசை செளந்தரராஜன்

news

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக வெளியீட்டிற்குத் தடை

news

மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுக: அண்ணாமலை காட்டம்

news

தமிழகத்தில் ஆவில் பால் பச்சை பாக்கெட் விலை உயர்வா? ஆவின் நிர்வாகம் விளக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்