பசுமரத்தாணி!

Jan 06, 2026,10:30 AM IST

- க.முருகேஸ்வரி


எங்கெங்கோ போகலாம்

ஏதேதோ ஆகலாம்

கடல் தாண்டி ஜெயிக்கலாம்

காலத்தையும் வெல்லலாம்

உயர் பதவி வகிக்கலாம்

ஏன் உலகையே நீ ஆளலாம்

என்னவெல்லாம் ஆனாலும்

உன் எண்ண ஓட்டத்தில்




பசுமரத்தாணி போல்

பத்திரமாய் பொதிந்திருக்கும்

பொக்கிஷம்

என்னவென்று எண்ணிப்பார் ......

சிலுக்குச் சட்ட போட்டுக்கிட்டு 

சிலேட்டுப் பலகை தூக்கிக் கிட்டு

சிணுங்கி சிணுங்கி 

அழுதுகிட்டு

ஒண்ணாப்பு சேர்ந்துபுட்டு

அஞ்சு வர அங்கணயே         

அழகாகதான் படிச்சுபுட்டு

அஞ்சு மைல் தாண்டி

அப்பாவுடன் சைக்கிள்ல

ஆறாப்பு போய்க்கிட்டு

நவ்வாப் பழம் 

நெல்லிக்காய் 

நட்புகளோடு பகிர்ந்துகிட்டு

இன்னும் பல பள்ளிக்கூட நினைவுகளும் 

ஒன்னு ரெண்டு சொல்லித் தந்த 

ஒண்ணாப்பு டீச்சரின் அழகும்

எண்ணும் எழுத்தும் கற்றுத்தந்த

எங்க ஊரு வாத்தியாரின் நினைவும்

நம் எண்ணம் முழுவதும் 

வண்ணங்களால் நிறைந்திருக்கும் 

பசுமரத்தாணி போல்

பசுமையாய்

நிலைத்திருக்கும்!!!!!!


(க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வயலாநல்லூர், பூவிருந்தவல்லி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Monday Motivation: ஆழ்கடலின் மோனத்தால் அறிவுநிலை கடந்த ஞானி.. கடல்!

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

கரிசல் மண்ணின் மைந்தன்.. எளிய மக்களின் எழுத்தாளர் பூமணி காலமானார்

news

சென்னை மாணவர்களுக்கு குட் நியூஸ்: இன்று முதல் 42 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

news

ஐவகை நிலங்களின் பெயரில்.. மாணவர் தலைவர், அமைச்சரைத் தேர்வு செய்யும்.. மகிழ் முற்றம்

news

எழுத்து சொற்களின் தொகுப்பல்ல.. மனித வாழ்வை மாற்றும் சக்தி.. எழுத்துச் சித்தர் பாலகுமாரன்!

news

இசையரசி ஜானகி.. நிலவை மேகம் மறைக்கலாம்.. நெஞ்சில் என்றுமே ஒளிவீசும்!

news

சிந்தனைச் சிதறல்.. தவறு என்றே தெரியாத ஒன்றை.. தவறானாலும் அது நமது தவறாகாது!

news

நீலத்திரைக்கடலோரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்