மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்ற கொள்கை கொண்ட தேசியத் தலைவரும், பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக திகழ்ந்தவருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவு தினமும், பிறந்த தினமும் அக்டோபர் 30ம் தேதி வருகிறது. இந்த நாளை குரு பூஜையாக கொண்டாடுவது வழக்கம். மொத்தம் 3 நாட்களாக இந்த விழா நடத்தப்படுவது வழக்கம். கடைசி நாளான இன்று அரசு விழாவாக இது கொண்டாடப்படுகிறது.
இந்த வருட விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பசும்பொன் கிராமத்திற்கு வருகை தந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். அதேபோல முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் என பல்வேறு விவிஐபிகள் வருகை தரவுள்ளனர். இதனால் பசும்பொன் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 8000க்கும் மேற்பட்ட போலீஸார், அதிரடிப் படையினர், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலை, தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்கள் சிலை உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கும் பல்வேறு கட்சியினர், தலைவர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தி வருகின்றனர். அங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}