- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
என் சிந்தனையை, செயலை
வழி நடத்துபவனே!
அனைவர்க்கும்
இறைவனே!
உண்டுறங்கி
மகிழ்ந்ததன்றி
வேறொன்றும்
அறியாத
என்னையும்
ஒரு பொருட்டாய்
நினைத்து வாழ
வைப்பவனே!
முக்கண்ணனே!
முதல்வனே!
எந்நாட்டவர்க்கும்
இறைவனே!

எனை வாழ்விக்க
வந்த எந்தன்
பரம்பொருளே!
பரமேஸ்வரனே!
சிந்தை நிறைந்த
சிவபெருமானே!
உலகத்து வாழ்க்கையிலே
உழன்று வரும் எனக்கு
அருள் புரிந்து
ஆதரித்து என்னை
வாழவைப்பவனே!
எந்தன் ஈசனே! சிவனே!
நான் பேசுபொருள்
அத்தனையும்
உன்னையல்லால்
வேறொன்றுமில்லை!
உன் திருவடி தொழுதேன்!
திருச்சிற்றம்பலமே!
ஓம் நமசிவாய!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}