சிவனே போற்றி! அரனே போற்றி!

Jul 30, 2026,02:02 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


என் சிந்தனையை, செயலை

வழி நடத்துபவனே! 

அனைவர்க்கும் 

இறைவனே!


உண்டுறங்கி 

மகிழ்ந்ததன்றி

வேறொன்றும் 

அறியாத 


என்னையும் 

ஒரு பொருட்டாய்

நினைத்து வாழ

வைப்பவனே!


முக்கண்ணனே! 

முதல்வனே!

எந்நாட்டவர்க்கும் 

இறைவனே! 




எனை வாழ்விக்க 

வந்த எந்தன்

பரம்பொருளே! 

பரமேஸ்வரனே! 


சிந்தை நிறைந்த 

சிவபெருமானே! 

உலகத்து வாழ்க்கையிலே 

உழன்று வரும் எனக்கு 


அருள் புரிந்து

ஆதரித்து என்னை 

வாழவைப்பவனே!

எந்தன் ஈசனே! சிவனே!


நான் பேசுபொருள் 

அத்தனையும் 

உன்னையல்லால்

வேறொன்றுமில்லை! 


அம்பலத்தானே!

ஆட்கொள்ள வா! 

உன் திருவடி தொழுதேன்!

திருச்சிற்றம்பலமே! 


ஓம் நமசிவாய!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

செயல்பாடுகள் மூலம் கற்றல்: தேவகோட்டை பள்ளி மாணவர்களுக்கு மூளைத் திறன் மேம்பாட்டு பயிற்சி

news

மயக்கும் மயிலே.. மயங்கும் மனமே!

news

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் முக்கிய இலக்கியப் படைப்புகள்!

news

சிவனே போற்றி! அரனே போற்றி!

news

சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்

news

தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்

news

செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?

news

சிந்தனைச் சிதறல்.. கொய்யா மரங்களிடமிருந்து மாங்கனிகளை எதிர்பார்க்கலாமா?

news

திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்