பெண்!

Mar 07, 2026,03:36 PM IST

- எ. பானுமதி, மதுரை


கனவு காட்டினால் காய் கனியாகும் 

பணிவு காட்டினால் பாறை பனியாகும் 

துணிவு காட்டினால் துன்பம் தூளாகும் 


உறவு காட்டினால் உலகம் ஒன்றாகும் 

பரிவு காட்டினால் நல்செறிவு ஆகும் 


அறிவு காட்டினால் அகிலம் வசமாகும் 

முனிவு கொண்டால் நல் முடிவு ஆகும் 


நிறைவு கொண்டால் நெஞ்சம் நெகிழும் 

விட்டுக்கொடுத்தால் வெளிச்சம் உண்டாகும் 




விடாமல் கொடுத்தால் வீடு பூச்செண்டாகும் 

கட்டிக் கொடுத்தால் கரிசனம் என்றாகும் 


தட்டிக் கொடுத்தால் தடைகள் தூளாகும்

இறங்கிவிட்டால் இரவு பகலாகும் 


இறங்கி வந்தால் இனிமை உண்டாகும் 

முன்னால் நடந்தது எல்லாம் விளங்கும்


பின்னால் நடப்பது எல்லாம் துலங்கும்

ஆக்குவதும் அழிப்பதும் அவளாலே எளிதில் நடக்கும் 


அவளின்றி அணு வில்லை 

அவள் இன்றி எதுவும் இல்லை


(பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கோவையை அதிர வைத்த.. மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள்!

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026 விஐபி தொகுதிகள்...எந்த தொகுதியில் யார் போட்டியிட வாய்ப்பு?

news

இந்தியா உதவியது ஏன்?... வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

news

கேஸ் சிலிண்டர் விலை உயர்விற்கு திமுக தான் காரணம்...அண்ணாமலை சொன்ன காரணம்

news

ஈரான் போர் எப்பதான் முடியும்.. ஏன் இந்த சண்டை.. அடுத்து என்னதான் நடக்கும்?

news

வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு

news

ஓம்பிர்லாவை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்: மார்ச் 9 அன்று லோக்சபாவில் முக்கிய நகர்வு

news

மங்கையர் தினமெல்லாம் இருக்கட்டும்.. முதல்ல இதைப் பற்றி யோசிக்கலாம் வாங்க!

news

மகளிரின் வலிமையும் அழகும்.. ஒரு கலைப் பார்வை!

அதிகம் பார்க்கும் செய்திகள்