- எ. பானுமதி, மதுரை
கனவு காட்டினால் காய் கனியாகும்
பணிவு காட்டினால் பாறை பனியாகும்
துணிவு காட்டினால் துன்பம் தூளாகும்
உறவு காட்டினால் உலகம் ஒன்றாகும்
பரிவு காட்டினால் நல்செறிவு ஆகும்
அறிவு காட்டினால் அகிலம் வசமாகும்
முனிவு கொண்டால் நல் முடிவு ஆகும்
நிறைவு கொண்டால் நெஞ்சம் நெகிழும்
விட்டுக்கொடுத்தால் வெளிச்சம் உண்டாகும்

விடாமல் கொடுத்தால் வீடு பூச்செண்டாகும்
கட்டிக் கொடுத்தால் கரிசனம் என்றாகும்
தட்டிக் கொடுத்தால் தடைகள் தூளாகும்
இறங்கிவிட்டால் இரவு பகலாகும்
இறங்கி வந்தால் இனிமை உண்டாகும்
முன்னால் நடந்தது எல்லாம் விளங்கும்
பின்னால் நடப்பது எல்லாம் துலங்கும்
ஆக்குவதும் அழிப்பதும் அவளாலே எளிதில் நடக்கும்
அவளின்றி அணு வில்லை
அவள் இன்றி எதுவும் இல்லை
(பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}