பெண்!

Mar 07, 2026,03:36 PM IST

- எ. பானுமதி, மதுரை


கனவு காட்டினால் காய் கனியாகும் 

பணிவு காட்டினால் பாறை பனியாகும் 

துணிவு காட்டினால் துன்பம் தூளாகும் 


உறவு காட்டினால் உலகம் ஒன்றாகும் 

பரிவு காட்டினால் நல்செறிவு ஆகும் 


அறிவு காட்டினால் அகிலம் வசமாகும் 

முனிவு கொண்டால் நல் முடிவு ஆகும் 


நிறைவு கொண்டால் நெஞ்சம் நெகிழும் 

விட்டுக்கொடுத்தால் வெளிச்சம் உண்டாகும் 




விடாமல் கொடுத்தால் வீடு பூச்செண்டாகும் 

கட்டிக் கொடுத்தால் கரிசனம் என்றாகும் 


தட்டிக் கொடுத்தால் தடைகள் தூளாகும்

இறங்கிவிட்டால் இரவு பகலாகும் 


இறங்கி வந்தால் இனிமை உண்டாகும் 

முன்னால் நடந்தது எல்லாம் விளங்கும்


பின்னால் நடப்பது எல்லாம் துலங்கும்

ஆக்குவதும் அழிப்பதும் அவளாலே எளிதில் நடக்கும் 


அவளின்றி அணு வில்லை 

அவள் இன்றி எதுவும் இல்லை


(பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்