காலை உணவு சாப்பிடுவதற்கு சரியான நேரம் எது? ஏன்?

Jan 09, 2026,11:36 AM IST

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு காலை உணவை கண்டிப்பாக தவிர்க்க கூடாது என ஏற்கனவே டாக்டர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். சமீபத்திய ஆய்வுகளின்படி, நாம் சாப்பிடும் உணவு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதைச் சாப்பிடும் நேரமும் முக்கியம். குறிப்பாக, காலை உணவு சாப்பிடுவதற்கு சரியான நேரம் எது? ஏன் அந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என விளக்கப்பட்டுள்ளது.


பிரான்சில் உள்ள நிறுவனம் (INRAE) நடத்திய ஆய்வில், காலை உணவை சீக்கிரம் (குறிப்பாக 8 மணிக்கு) சாப்பிடுவது இதய நோய்க்கான ஆபத்தைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. காலை உணவை ஒவ்வொரு மணி நேரம் தாமதப்படுத்தும் போதும், இதய நோய் ஏற்படும் அபாயம் 6% அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கு டாக்டர்கள் சொல்லும் 4 காரணங்கள் :




1. இரத்த சர்க்கரை அளவு: காலை 8 மணிக்கு உணவை உட்கொள்வது உங்கள் உடலின் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. இது நாள் முழுவதும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.


2. உடல் வளர்சிதை மாற்றம் (Metabolism): காலை 8 மணிக்குச் சாப்பிடுவது உங்கள் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, உடலுக்குத் தேவையான ஆற்றலை உடனடியாக வழங்குகிறது. இது தேவையற்ற உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.


3. சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம்: காலை 9 மணிக்குப் பிறகு காலை உணவைச் சாப்பிடுபவர்களுக்கு, டைப்-2 நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன.


4. இரவு உணவோடு தொடர்பு: காலை உணவை 8 மணிக்குச் சாப்பிடுவது போல, இரவு உணவை 8 மணிக்குள் முடிப்பதும் சிறந்தது. இது இரவு நேர உபவாச காலத்தை (Fasting period) அதிகரித்து, செரிமான மண்டலத்திற்குப் போதிய ஓய்வு அளிக்கிறது.


உங்கள் உடல் கடிகாரத்தின் (Circadian Rhythm) படி, காலை 8 மணி என்பது உங்கள் உடல் உணவை ஏற்றுக் கொண்டு ஆற்றலாக மாற்றத் தயாராக இருக்கும் மிகச்சிறந்த நேரமாகும். எனவே, இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், சுறுசுறுப்பாக இருக்கவும் காலை 8 மணிக்குள் உணவைச் சாப்பிடுவதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!

news

முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

news

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு

news

நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்

news

ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்

news

போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?

news

முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்