துபாய்: துபாயில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போது தங்களது மனைவியரை அழைத்து வரலாம் என்று இந்திய வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் கூடவே கிடுக்குப்பிடியான நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மனைவியரை கூட்டி வரலாம் என்று பிசிசிஐ அனுமதித்திருப்பதால் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் தங்களது துணையுடன் துபாய் கிளம்பவுள்ளனர்.
சமீபத்தில் நடந்த பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியா கடுமையான தோல்வியைச் சந்தித்தது. இதையடுத்து இந்திய வீரர்கள் வெளிநாடு செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய கடுமையான விதிகளில் தற்போது சிறிது தளர்வைக் கொண்டு வந்துள்ளது பிசிசிஐ. அதில் ஒன்றுதான் மனைவியரை உடன் அழைத்துச் செல்லலாம் என்பது.

மனைவி குழந்தைகளுடன் இந்திய அணி வீரர்கள் வர அனுமதித்துள்ள பிசிசிஐ அதற்குப் போட்டுள்ள கண்டிஷன்தான் வினோதமாக இருக்கிறது. அதாவது ஒரே ஒரு போட்டிக்கு மட்டுமே மனைவி குழந்தைகளைக் கூட்டி வர முடியும். எந்தப் போட்டி என்று முன் கூட்டியே பிசிசிஐக்குத் தெரிவித்தால், அதற்குரிய ஏற்பாட்டை பிசிசிஐ செய்து தரும்.
இதற்கு முன்பு, 45 நாட்களுக்கு மேலான வெளிநாட்டுத் தொடர்களின்போது 2 வாரம் வரைக்கும் குடும்பத்தினரை அழைத்துக் கொள்ள இந்திய அணி அனுமதித்து வருகிறது. தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறுகிய காலமே நடைபெறவுள்ளதால் ஒரே ஒரு போட்டிக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டிருக்கிறதாம்.
இந்திய அணி பிப்ரவரி 20ம் தேதி தனது முதல் போட்டியாக வங்கதேசத்துடன் மோதவுள்ளது. முக்கியப் போட்டியான இந்தியா பாகிஸ்தான் மோதல் பிப்ரவரி 23ம் தேதி நடைபெறும். மார்ச் 2ம் தேதி நியூசிலாந்துடன் இந்தியா மோதும். அனைத்துப் போட்டிகளும் துபாயில்தான் நடைபெறவுள்ளது. இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால் அது துபாயில் நடைபெறும். இல்லாவிட்டால் பாகிஸ்தானில் நடைபெறும்.
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு.. எதுக்காக?
விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் கூட்டணி: தவெக கூட்டத்தில் தீர்மானம்
சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் பணிகள்.. டிசம்பர் 15 முதல் அஇஅதிமுக விருப்பமனு!
சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது.. தமிழ்நாடு பெருமை கொள்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்
சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்துக்கு வாங்க... பாமக நிர்வாகிகள் நேரில் சென்று தவெகவிற்கு அழைப்பு
98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?
தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்... இன்றைய விலை நிலவரம் இதோ
{{comments.comment}}