சென்னை: பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. வழக்கம் போல மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பிளஸ் டூ தேர்வில் மொத்தம் 95.20 சதவீதம் மாணவ மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதில் மாணவியரின் எண்ணிக்கை 97 சதவீதம் ஆகும். மாணவர்கள் எண்ணிக்கை 93.19 சதவீதம் ஆகும்.
தமிழ்நாட்டிலேயே அதிக அளவாக ஈரோடு மாவட்டத்தில் 98.87 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். சிவகங்கையில் 98.05, கன்னியாகுமரியில் 97.63, திருநெல்வேலியில் 97.84, திருச்சியில் 97.50 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

பிளஸ்டூ தேர்வு முடிவுகள் சுருக்கமான விவரம்:
தேர்வெழுதிய மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை : 7,91,654
மாணவியர்களின் எண்ணிக்கை : 4,18,724.
மாணவர்களின் எண்ணிக்கை : 3,72,930.
தேர்ச்சி விவரங்கள்:
மொத்த தேர்ச்சி - 7,53,694 (95.20%).
மாணவியர் 4,06,167 (97.00 %)
மாணவர்கள் 3,47,527 (93.19 %)
மாணவர்களை விட 3.81% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்விற்கு வருகை புரியாதவர்கள்: 7,874.
கடந்த மார்ச் - 2025 பொதுத்தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 7,92,494.
தேர்ச்சி பெற்றோர் 7,53,142, தேர்ச்சி சதவீதம் 95.03%.
கடந்த ஆண்டு பொதுத்தேர்வினை விட இவ்வாண்டு தேர்ச்சி 0.17% சதவீதம் கூடுதலாக உள்ளது.
Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!
FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்
பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!
கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!
Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!
Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)
Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!
தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!
இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
{{comments.comment}}