டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் உள்ள பசு ஒன்று கன்று ஈன்றுள்ளது. அந்தக் கன்றுக் குட்டிக்கு தீப்ஜோதி என்று பெயரிட்டுள்ள பிரதமர் மோடி அதைத் தூக்கி கொஞ்சி பாசம் காட்டிய புகைப்படங்களையும், வீடியோவையும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம், டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ளது. இங்கு பசுக்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தற்போது கன்று ஈன்றுள்ளது. அந்தக் கன்றுக் குட்டிக்கு பிரதமர் மோடி, தீப் ஜோதி என்று பெயரிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் புகைப்படங்களையும், வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் கன்றுக் குட்டி வீட்டுக்குள் நடந்து வருவது, பிரதமர் இருக்கையில் சொகுசாக அவருக்கு அருகில் அமர்ந்திருப்பது, அவரது மடியில் படுத்திருப்பது என்று க்யூட்டாக இருக்கிறது தீப் ஜோதி கன்றுக் குட்டி.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் இல்லத்துக்கு அருமையான புது வரவாக தீப்ஜோதி வந்துள்ளார். அந்தக் கன்றுக் குட்டியின் நெற்றியில் ஜோதி போன்ற வடிவம் உள்ளது. இதனால் கன்றுக் குட்டிக்கு தீப் ஜோதி என்று பெயரிட்டுள்ளேன். புதிய கன்றுக் குட்டியின் வரவு மங்களகரமானதாக உள்ளது என்று கூறி மகிழ்ந்துள்ளார் பிரதமர் மோடி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
டெல்லியிலும், சுற்று வட்டாரத்திலும்.. விடிஞ்சு வந்து பார்த்தா.. ஒரே smog.. இயல்பு நிலை பாதிப்பு
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
{{comments.comment}}