டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் உள்ள பசு ஒன்று கன்று ஈன்றுள்ளது. அந்தக் கன்றுக் குட்டிக்கு தீப்ஜோதி என்று பெயரிட்டுள்ள பிரதமர் மோடி அதைத் தூக்கி கொஞ்சி பாசம் காட்டிய புகைப்படங்களையும், வீடியோவையும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம், டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ளது. இங்கு பசுக்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தற்போது கன்று ஈன்றுள்ளது. அந்தக் கன்றுக் குட்டிக்கு பிரதமர் மோடி, தீப் ஜோதி என்று பெயரிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் புகைப்படங்களையும், வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் கன்றுக் குட்டி வீட்டுக்குள் நடந்து வருவது, பிரதமர் இருக்கையில் சொகுசாக அவருக்கு அருகில் அமர்ந்திருப்பது, அவரது மடியில் படுத்திருப்பது என்று க்யூட்டாக இருக்கிறது தீப் ஜோதி கன்றுக் குட்டி.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் இல்லத்துக்கு அருமையான புது வரவாக தீப்ஜோதி வந்துள்ளார். அந்தக் கன்றுக் குட்டியின் நெற்றியில் ஜோதி போன்ற வடிவம் உள்ளது. இதனால் கன்றுக் குட்டிக்கு தீப் ஜோதி என்று பெயரிட்டுள்ளேன். புதிய கன்றுக் குட்டியின் வரவு மங்களகரமானதாக உள்ளது என்று கூறி மகிழ்ந்துள்ளார் பிரதமர் மோடி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}