டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் உள்ள பசு ஒன்று கன்று ஈன்றுள்ளது. அந்தக் கன்றுக் குட்டிக்கு தீப்ஜோதி என்று பெயரிட்டுள்ள பிரதமர் மோடி அதைத் தூக்கி கொஞ்சி பாசம் காட்டிய புகைப்படங்களையும், வீடியோவையும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம், டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ளது. இங்கு பசுக்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தற்போது கன்று ஈன்றுள்ளது. அந்தக் கன்றுக் குட்டிக்கு பிரதமர் மோடி, தீப் ஜோதி என்று பெயரிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் புகைப்படங்களையும், வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் கன்றுக் குட்டி வீட்டுக்குள் நடந்து வருவது, பிரதமர் இருக்கையில் சொகுசாக அவருக்கு அருகில் அமர்ந்திருப்பது, அவரது மடியில் படுத்திருப்பது என்று க்யூட்டாக இருக்கிறது தீப் ஜோதி கன்றுக் குட்டி.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் இல்லத்துக்கு அருமையான புது வரவாக தீப்ஜோதி வந்துள்ளார். அந்தக் கன்றுக் குட்டியின் நெற்றியில் ஜோதி போன்ற வடிவம் உள்ளது. இதனால் கன்றுக் குட்டிக்கு தீப் ஜோதி என்று பெயரிட்டுள்ளேன். புதிய கன்றுக் குட்டியின் வரவு மங்களகரமானதாக உள்ளது என்று கூறி மகிழ்ந்துள்ளார் பிரதமர் மோடி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Real Life Dragon: டிராகன் பட பாணியில் விர்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம்!
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
சுக்கிர பிரதோஷம்.. தேய்பிறை சுக்கிர பிரதோஷம் அதீத சிறப்புடையது!
ப்ளஸ் 1 பொதுத் தேர்வு... கணினி அறிவியல் பாடத்தில் கருணை மதிப்பெண் அறிவிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
Gold rate: எந்த மாற்றமும் இல்லை.. நேற்றைய நிலையிலேயே.. இன்றைய தங்கம் விலை!
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
Box office: தமிழ்நாட்டில் குட் பேட் திரைப்படத்தின் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா..?
{{comments.comment}}