டில்லி : லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே மத்திய அமைச்சரவை கூட்டத்தை கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக ஞாயிற்றுக்கிழமையில் அமைச்சரவை கூட்டத்தை கூட்டி உள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
2024 ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 ம் தேதி துவங்கி, ஜூன் 01ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஜூன் 04ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை வரை இப்படி ஒரு கூட்டம் நடத்தப்பட உள்ளதாக அரசு அலுவல் அட்டவணையிலேயே கிடையாதாம். திடீரென்று தான் இந்த கூட்டம் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அதுவும் எதற்காக இந்த அவசர அமைச்சரவை கூட்டம், இதில் எதைப் பற்றி ஆலோசிக்க போகிறார்கள் என்பது தெரியவில்லையாம். ஆனால் பல முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக தான் இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஓமன் நாட்டுடனான வர்த்தக ஒப்பந்தம், ஈரானின் சபாகர் துறைமுகத்தின் எல்லை வரம்பை விரிவு செய்வது உள்ளிட்ட நிலுவையில் உள்ள விவகாரங்கள் குறித்து முடிவு செய்வதற்காக தான் இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த வாரம் இதே போல் நடத்தப்பட்ட அமைச்சரவை கூட்டத்தில் இந்திய எல்லை விவகாரம் குறித்து பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டதால் கொள்கை சார்ந்த முடிவுகள் எதையும் மத்திய அரசு எடுக்க முடியாது. அதே சமயம் நிலுவையில் உள்ள சர்வதேச விவகாரங்கள், அண்டை நாட்டு உறவுகள் குறித்து முடிவு செய்ய முடியும். எந்த அறிவிப்பு வெளியிடுவதாக இருந்தாலும் தேர்தல் கமிஷனின் ஒப்புதல் பெற்ற பிறகே மத்திய அரசால் இனி வெளியிட முடியும்.
சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களிடம் தேர்தல் பணியில் யாரும் பின்புலத்தில் இருந்து அதிகாரத்தை பயன்படுத்தி செயல்படக் கூடாது என பிரதமர் மோடி கண்டிப்பாக சொல்லி விட்டாராம்.
Cyclone Montha effect: திருவள்ளூருக்கு ஆரஞ்சு... சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு
ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்
இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!
மோன்தா புயல் தீவிரம்... ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்
தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்
{{comments.comment}}