திருநெல்வேலி அல்வா போல இனிமையானவர்கள் நீங்கள்.. நெல்லையை அதிர வைத்த பிரதமர் மோடி!

Feb 28, 2024,06:46 PM IST
திருநெல்வேலி: நெல்லை மக்கள், திருநெல்வேலி அல்வா போல இனிமையானவர்கள். உங்களுக்கு நான் பேசுவது புரியாமல் இருக்கலாம்.. ஆனால் என்னை புரிந்து வைத்துள்ளீர்கள். தமிழில் பேச முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு அதிகம் இருக்கிறது என்று திருநெல்வேலியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில்  பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடியில் திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு, நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழர்கள், தமிழர்களின் பிள்ளைகளை முன்னேற்ற நான் இருக்கிறேன். தமிழில் பேச முடியவில்லை என்ற ஏக்கம் எனக்கு அதிகம் இருக்கிறது. நான் பேசுவது புரியவில்லை என்றாலும் எனது மனதை தமிழர்கள் புரிந்து கொண்டுள்ளனர். அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு எனது பணிவான வணக்கங்களையும் நமஸ்காரங்களையும் உரித்தாக்குகின்றேன்.



நாடு 100 அடிகளை நோக்கி  முன்னேறும்போது தமிழ்நாட்டையும் அதே அளவுக்கு முன்னேற்றுவது நம் கடமை. அது தான் மோடியின் வாக்குறுதி. இதற்குதான் மதுரையில் எய்ம்ஸ் தொடங்க உள்ளோம். நெல்லை மக்கள் திருநெல்வேலி அல்வா போன்ற இனிப்பானவர்கள், இனிமையானவர்கள். தமிழ்நாட்டில் குழந்தைகள், இளைஞர், பெரியவர்கள் என அனைத்து வயதினரும் பாஜக மீது அளப்பரிய நம்பிக்கை வைத்துள்ளனர். 

தமிழ்நாட்டிற்காக நான் அளித்து அத்தனை உறுதி மொழிகளையும் கண்டிப்பாக நிறைவேற்றுவேன் இது எனது உத்தரவாதம். தமிழ்நாட்டு மக்கள் எதிர்காலத்தைப் பற்றி தெளிவுடன் இருப்பார்கள். ஏனெனில், தொழில்நுட்ப அறிவில் தமிழர்கள் சிறந்து விளங்குகின்றனர். பாஜகவின் அணுகுமுறை தமிழ் மக்களின் சிந்தனையோடு ஒத்துப் போகிறது.

பாஜக தான் தமிழ்நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய கட்சி. உலகெங்கிலும் வசிக்கும் தமிழ் மக்கள் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதை நினைத்து பெருமைப்படுகிறார்கள். இது மத்திய அரசின் செயல்பாடுகளால் தான் வருகிறது.

தமிழ்நாடு மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையும், விசுவாசமும் எங்களுக்கு கிடைத்த ஆசிர்வாதம்.மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் அனைத்து மக்களுக்கும் கிடைத்துள்ளது. மாற்று எரிசக்தி துறையில் உலகில் முதன்மையான நாடாக இந்தியா உள்ளது. மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தராத ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. மத்திய அரசு எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் தமிழக அரசு குறை சொல்கிறது.

திமுக தமிழ்நாட்டை சுரண்டவது போல, காங்கிரஸ் இந்தியா கூட்டணியை அமைத்து நாட்டை கொள்ளையடிக்க முயற்சி செய்கிறது. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி திமுகவும், காங்கிரசும் சம்பாதிக்க நினைக்கிறது. குடும்ப அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். லோக்சபா தேர்தலுக்குப் பிறகு  திமுக என்ற கட்சியே தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போகும். 

குடும்ப அரசியல் தான் தலைதூக்கியுள்ளது. எந்த திட்டமும் இல்லாமல் எதிர்க்கட்சிகள் உள்ளன. ஆனால், ஆட்சிக்கு வந்தால் யார் அமைச்சர் ஆவார்கள் என்ற திட்டம் மட்டும் அவர்களிடம் இருக்கிறது. நெல்லை மக்களின் ஆசியோடு நான் மூன்றாவது முறையாக பதவியில் மீண்டும் அமர்வேன் என்றார் பிரதமர் மோடி.

சமீபத்திய செய்திகள்

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்