ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தையும், மண்டபம் பகுதியையும் இணைக்கும் ரயில்வே கடல் பாலம் புதிய தொழில்நுட்பத்தில் அதி நவீனமாக கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த விழாவின்போது ராமேஸவரம்- தாம்பரம் இடையிலான புதிய ரயில் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
முன்னதாக இலங்கையின் அனுராதபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. அங்கிருந்து கார் மூலம் பாம்பன் கடல் மேம்பாலத்திற்கு அவர் வந்தடைந்தார். அங்கிருந்தபடி பாம்பன் ரயில் பாலத்தையும், புதிய ரயில் சேவையையும் அவர் தொடங்கி வைத்தார். விழாவில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ், ஆளுநர் ஆர். என். ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டு பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டிலேயே முதலாவது வெர்ட்டிகல் லிப்ட் கடல் பாலம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இருந்த கிட்டத்தட்ட நூறாண்டுகளைக் கடந்த பழைய பாம்பன் பாலத்திற்குப் பதில் இந்தப் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.
புதிதாக கட்டப்பட்டுள்ள கடல் பாலமானது 2.07 கிலோமீட்டர் நீளம் கொண்டது. பாக் நீரிணையின் மீது இந்த பாலம் செல்கிறது. இந்தப் பாலத்தின் நடுவே, தானியங்கி தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது கப்பல்கள் இந்தப் பகுதி வழியாக கடந்து செல்லும்போது இந்த தூக்கு பாலமானது மேலெழும்பி கப்பல் செல்ல வழி கொடுக்கும்.
இந்தப் பாலத்தில் இரு முனை ரயில்வே பாதைகளை அமைக்க முடியும். இருப்பினும் தற்போது ஒரு வழிப் பாதை மட்டுமே போடப்பட்டுள்ளது.

இந்த ரயில் பாலம் மீது மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல ரயில்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம் இந்தப் பாலத்தைக் கட்டியுள்ளது. ரூ. 550 கோடி மதிப்பில் பாலம் உருவாகியுள்ளது.
100 வருடங்கள் வரை செயல்படக் கூடிய வகையில் இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சிறந்த தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறைந்த அளவிலான பராமரிப்பே தேவைப்படும் வகையில் பாலம் கட்டப்பட்டுள்ளது.
பழைய பாலத்தை விட 3 மீட்டர் உயரம் கொண்டதாக புதிய பாலம் அமைந்துள்ளது. இங்கிலாந்தின் டவர் பிரிட்ஜ், அமெரிக்காவின் கோல்டன் கேட் பாலம் ஆகியவற்றுக்கு நிகராக புதிய பாம்பன் பாலம் அமைந்துள்ளது.
பழைய பாம்பன் பாலம் கடந்த 1914ம் ஆண்டு இங்கிலாந்து ஆட்சியின்போது கட்டப்பட்டது. இந்தப் பாலத்தில் இடம் பெற்றுள்ள தூக்கு பாலமானது மனிதர்களால் இயக்கப்படக் கூடியதாக அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய பாலத்தில் எல்லாமே தானியங்கியாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் ஆப்புக்கு வந்துருச்சு ஆப்பு.. எலான் மஸ்கின் X-சாட் தான் டாப்பாமே.. மக்கா!
தீபங்கள் ஏற்றும்.. திருக்கார்த்திகை மாதத்தில்.. துளசி பூஜை வெகு விசேஷம்!
SIR பணிகளைப் புறக்கணித்து.. போராட்டத்தில் குதித்த வருவாய்த்துறை ஊழியர்கள்
சென்னை மாநகரில் குடிநீர் உபயோகத்தை கண்காணிக்க ஸ்மார்ட் மீட்டர்.. மாநகராட்சி திட்டம்
திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!
குடிநீர் விநியோகம் சரியில்லை.. மேட்டுப்பாளையத்தில் குமுறலை வெளியிட்ட குடும்பங்கள்!
விவசாயிகளே.. உங்களுக்கு சில நற்செய்திகள்.. வாங்க வந்து படிங்க இதை!
தாலி இவ்ளோ அசிங்கமா காமிச்சது சரியில்ல: இயக்குனர் கே. பாக்கியராஜ்
சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்
{{comments.comment}}