அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் முதல் இந்துக் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார். இதற்காக அவர் 2 நாள் பயணமாக எமிரேட்ஸுக்குச் செல்லவுள்ளார்.
பிப்ரவரி 13ம் தேதி எமிரேட்ஸ் செல்லும் பிரதமர் மோடி, 14ம் தேதி வரை அங்கு இருப்பார். அப்போது எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயத் அல் நஹியானையும் அவர் சந்திக்கவுள்ளார். கடந்த 2015ம் ஆண்டிலிருந்து எமிரேட்ஸுக்கு பிரதமர் மோடி செல்வது இது 7வது முறையாகும்.

எமிரேட்ஸ் அதிபருடன் பேசும்போது இரு தரப்பு உறவுகள், பன்னாட்டு விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது பயணத்தின்போது துணை அதிபரும், பிரதமருமான ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூமையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசுவார். மேலும் துபாயில் நடைபெறும் உலக அரசு மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.
பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தின்போது இன்னொரு முக்கிய அம்சமாக, அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதலாவது இந்துக் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைுப்பார். மேலும் ஜாயேத் விளையாடடு நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தியர்களையும் சந்தித்து அவர்கள் மத்தியில் பிரதமர் உரை நிகழ்த்துவார்.
ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!
தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?
ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்
எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?
விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி
இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்
திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!
எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்
நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!
{{comments.comment}}