அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் முதல் இந்துக் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார். இதற்காக அவர் 2 நாள் பயணமாக எமிரேட்ஸுக்குச் செல்லவுள்ளார்.
பிப்ரவரி 13ம் தேதி எமிரேட்ஸ் செல்லும் பிரதமர் மோடி, 14ம் தேதி வரை அங்கு இருப்பார். அப்போது எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயத் அல் நஹியானையும் அவர் சந்திக்கவுள்ளார். கடந்த 2015ம் ஆண்டிலிருந்து எமிரேட்ஸுக்கு பிரதமர் மோடி செல்வது இது 7வது முறையாகும்.

எமிரேட்ஸ் அதிபருடன் பேசும்போது இரு தரப்பு உறவுகள், பன்னாட்டு விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது பயணத்தின்போது துணை அதிபரும், பிரதமருமான ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூமையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசுவார். மேலும் துபாயில் நடைபெறும் உலக அரசு மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.
பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தின்போது இன்னொரு முக்கிய அம்சமாக, அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதலாவது இந்துக் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைுப்பார். மேலும் ஜாயேத் விளையாடடு நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தியர்களையும் சந்தித்து அவர்கள் மத்தியில் பிரதமர் உரை நிகழ்த்துவார்.
May 1: காலத்தின் நெற்றியில் நீ இடும் கையெழுத்து.. காய்ந்த உன் கரங்களின் வியர்வை முத்து!
ரவிவர்மன் எழுதாத கலையோ.. மறக்க முடியாத ஓவிய வித்தகர்.. ராஜா ரவிவர்மா!
சித்தார்த்தனின் புத்த பூர்ணிமா!
அனுபவம் அறிவோம்.. செலவு குறைந்த புதுவிதமான சிறந்த திருமணம்!
அழகு மாறும்.. ஆன்மா அப்படியே இருக்கும்!
நல்ல பாட்டு கேட்டா.. ஆஹா.. அடடா.. Good songs are good healers!
A Silk Wrapped in Love
S Sharmila Poem: உனக்குள் ஒருவன்!
நதியும் நீயும் ஒன்றோ!
{{comments.comment}}