இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.. அவரவர் நாணயத்தில் வர்த்தகம்.. அட்டகாசமான ஒப்பந்தம்

Jul 16, 2023,11:47 AM IST
- சகாயதேவி

டெல்லி: இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய  நாடுகள் அவரவர் கரன்சியிலேயே வர்த்தகம் செய்யும் அருமையான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இது இரு நாடுகளுக்கிடையிலான  வர்த்தகத்தை விரிவுபடுத்த பேருதவி செய்யும் என்று நம்பப்படுகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை விஜயம் செய்தார். அபுதாபியில் அந்த நாட்டு அதிபர் ஷேக் முகம்மது பின் சயத்  அல் நஹயானுடன் அவர் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தினார்.   இந்த பேச்சுவார்த்தையின்போது, அந்தந்த நாட்டு நாணயங்களான ரூபாய் மற்றும் திர்ஹாம் ஆகியவற்றில் வர்த்தகம் செய்வது  உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.



இந்த ஏற்பாடு இரு நாடுகளுக்கும் இடையே முதலீடுகள் மற்றும் பணம் அனுப்புவதை ஊக்குவிக்கும். உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்துவது பரிவர்த்தனை செலவுகள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கான தீர்வு நேரத்தை மேம்படுத்தும். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இந்தியர்களிடமிருந்து பணம் அனுப்புதல் உட்பட எல்லோருக்கும் பயன் அளிக்கும் ஒரு விஷயம் தான் என நிச்சயமாக சொல்லலாம்.

இந்த புதிய பரிவர்த்தனை முறை அமலுக்கு வந்த பின்னர், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தங்க ஏற்றுமதியாளர் ஒருவர் 25 கிலோ தங்கத்தை விற்பனை செய்துள்ளார். இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி பிரான்சில் சுற்றுப் பயணம் செய்திருந்தார். அங்கு இந்தியாவின் யுபிஐ நடைமுறையை அறிமுகப்படுத்தியது நினைவிருக்கலாம். அதேபோல அபுதாபியில் டெல்லி ஐஐடியின் வளாகம் அமைப்பதையும் அவர் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியின் பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணங்கள் மிகவும் ஆக்கப்பூர்வமானதாக அமைந்ததாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்