சென்னை: இயக்குனர் காளிமுத்து காத்தமுத்து, பாடலுக்காக கவிஞர் வைரமுத்துவிடம் படக்கதையை சொன்னதும் கதை மிகவும் பிடித்துப் போனதாம். இப்படத்திற்கு வேட்டைக்காரி என தலைப்பு வையுங்க. படம் மக்களிடம் சிறப்பாக சென்று சேரும் எனக் வைரமுத்து கூறி உள்ளார்.
கவிப்பேரரசு வைரமுத்து பெயர் வைத்த வேட்டைக்காரி படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி, இயக்கி உள்ளார் இயக்குனர் காளிமுத்து காத்தமுத்து. ஸ்ரீ கருப்பர் ஃபிலிம் சார்பில், இப்படத்தை விஷ்ணுபிரியா வேலுச்சாமி தயாரித்துள்ளார். வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு ஏ.கே.ராம்ஜி இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ராஜபாளையம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் எழிலாய் அமைந்துள்ள ஏலக்காய் தோட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து பார்க்கும்போது இந்த வனப் பகுதிகள் அழகாக தெரியும். ஆனால் அதற்குள் வாழும் மக்களின் அவதிகளையும், அங்கே ஒரு காதல் ஜோடிக்கு நடக்கும் பிரச்னைகளையும் மையமாக கொண்டு வேட்டைக்காரி படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் ராகுல் நாயகனாகவும், சஞ்சனா சிங் நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் வின்சென்ட் அசோகன், கஞ்சா கருப்பு, மற்றும் பிரபல கலைஞர்கள் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் வேட்டைக்காரி படத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளில் இசை வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இப்படம் விரைவில் திரைக்கு வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இப்படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்த போனது.அதனால் வேட்டைக்காரி என தலைப்பு வையுங்கள். இப்படம் மக்களிடையே சிறப்பாக சென்று சேரும் என கூறி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களை வாழ்த்தி உள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
{{comments.comment}}