- மஞ்சுளா தேவி
சென்னை: அதிக ஆபத்தை விளைவிக்கும் வகையில் பைக் வீலிங் செய்து விபத்தை ஏற்படுத்திய டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனல் முடக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.
கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் பைக் வீலிங் சாகசம் செய்து விபத்தை ஏற்படுத்தியவர் டிடிஎஃப் வாசன். இந்த விபத்தில் இவருக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டு உயிர் தப்பினார்.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்று ஜாமீன் பெற்று தற்போது வெளியே வந்துள்ளார். அவரது டூவீலர் வாகன லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டு விட்டது. அவரால் பைக் ஓட்ட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது டிடிஎப் வாசனின் யூடியூப் சானலை முடக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மூல வழக்கு விசாரணையில் உள்ள காஞ்சிபுரம் செஷன்ஸ் கோர்ட்டில் போலீஸார் மனு செய்துள்ளனர். கோர்ட் அனுமதி கிடைத்தவுடன் வாசனின் சானலை முடக்குவது தொடர்பாக யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்படும் என்று தெரிகிறது.
பொறுமையை சோதிக்கும் கூட்டணிக் கட்சிகள்.. அமைதியாக இருக்கும் திமுக.. என்ன நடக்கும்?
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட்:பிப்ரவரி 12ல் மதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ
தமிழகத்தில் ஆட்சியாளர்களை எதிர்த்து எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது: ஜி.கே.வாசன் பேட்டி
ராமதாஸ் பாமக வந்தால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்...திருமாவளவன் உறுதி
கிச்சனில் இருக்கும்போது கவனம் தோழியரே.. எண்ணெய் தீ விபத்தை.. தடுப்பது எப்படி?
ஒரு வாரத்துக்கு நகைக் கடை பக்கமே போகாமல் இருந்தால் தங்கம் விலை குறையுமா!?
பிப்ரவரி 17-ல் தமிழக இடைக்கால பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
இந்திய சீனியர் அணிக்கு வைபவ் வர முடியாது.. குறுக்கே நிற்கும் கெளஷிக் (ஐசிசி விதி)!
முகம்து சிராஜுக்கு அடித்த லக்கி பிரைஸ்.. ராணா வெளியேறினார்.. சிராஜுக்கு வாய்ப்பு!
{{comments.comment}}