- மஞ்சுளா தேவி
சென்னை: அதிக ஆபத்தை விளைவிக்கும் வகையில் பைக் வீலிங் செய்து விபத்தை ஏற்படுத்திய டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனல் முடக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.
கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் பைக் வீலிங் சாகசம் செய்து விபத்தை ஏற்படுத்தியவர் டிடிஎஃப் வாசன். இந்த விபத்தில் இவருக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டு உயிர் தப்பினார்.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்று ஜாமீன் பெற்று தற்போது வெளியே வந்துள்ளார். அவரது டூவீலர் வாகன லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டு விட்டது. அவரால் பைக் ஓட்ட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது டிடிஎப் வாசனின் யூடியூப் சானலை முடக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மூல வழக்கு விசாரணையில் உள்ள காஞ்சிபுரம் செஷன்ஸ் கோர்ட்டில் போலீஸார் மனு செய்துள்ளனர். கோர்ட் அனுமதி கிடைத்தவுடன் வாசனின் சானலை முடக்குவது தொடர்பாக யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்படும் என்று தெரிகிறது.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}