அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு.. ஏன்?

Sep 05, 2023,10:46 AM IST
சென்னை: சென்னை க்ரீன்வேஸ் சாலை மற்றும் நீலாங்கரையில் உள்ள விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்துப் பேசியதை சர்ச்சையாக்கி வருகிறார்கள். பாஜக, இந்து அமைப்புகள் உள்ளிட்டோர் இந்தப் பேச்சைக் கண்டித்துப் பேசி வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியா என்ற சாமியார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூபாய் 10 கோடி கொடுப்பதாக கூறியுள்ளார். 



கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தானின் துங்ர்பூரில் பாஜகவின் பரிவர்த்தன் யாத்திரை தொடக்க விழா நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில்  உள்துறை அமைச்சர் அமித்ஷா  பேசும்போது, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சனாதன தர்மத்தை அவமதிப்பதாக குற்றம் சாட்டினர்.  இதற்கு எதிராக சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு  நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக, இந்து அமைப்புகளைச் சேர்ந்த பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலாங்கரையில் உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எப்போதும் ஒரு காவலர் என்ற சுழற்சி முறையில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது பத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஓபிஎஸ்.,க்கு இடமில்லை...ஸ்டாலினுக்கு அனுபவமில்லை...விஜய் தலைவரே அல்ல...வெளுத்து வாங்கிய இபிஎஸ்

news

நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!

news

பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?

news

தமிழக வாக்காளர் பட்டியல் 2026...பெயர் சேர்க்க 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு

news

மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்... பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

news

முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்...தைப்பூசத்திற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்

news

அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு... வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும்: எடப்பாடி பழனிச்சாமி

news

நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது: நயினார் நாகேந்திரன்

news

டி20 உலகக் கோப்பை: இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவில் பாகிஸ்தான் தீவிரம்?

அதிகம் பார்க்கும் செய்திகள்