சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை முதல் அதாவது செப்டம்பர் 12 முதல் தொடங்க உள்ளது.
2025ஆம் ஆண்டில் பொங்கல் விழா ஜனவரி 13 முதல் 16 ஆம் தேதி வரை உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட உள்ளது. அதன்படி ஜனவரி 13ம் தேதி போகி பண்டிகை, 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 15 ஆம் தேதி மாட்டுப்பொங்கல், 16ஆம் தேதி காணும் பொங்கல், என தொடர்ந்து நான்கு நாட்கள் பொங்கல் பண்டிகைக்காக அரசு விடுமுறை விடப்படுகிறது. இதையடுத்து மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று தடபுடலாக பண்டிகையைக் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிக்கைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. ரயில்களில் பயணம் செய்ய 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யப்பட வேண்டும். அதன்படி பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது. அதன்படி ஜனவரி 10ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளை அதாவது செப்டம்பர் 12ஆம் தேதி முன்பதிவு செய்யலாம். அதேபோல் ஜனவரி 11-ம் தேதி பயணம் செய்பவர்கள் செப்டம்பர் 13ஆம் தேதியும், ஜனவரி 12ஆம் தேதி பயணம் செய்பவர்கள் செப்டம்பர் 14ஆம் தேதியும், ஜனவரி 13ஆம் தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்வோர் செப்டம்பர் 15ஆம் தேதியும் டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும் பொங்கல் பண்டிகையின் போது சொந்த ஊருக்கு செல்வோர்கள் முன்பதிவு செய்ய ரயில் நிலைய முன்பதிவு மையம் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி என்ற இணையதளம் வாயிலாகவும் காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}