சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை முதல் அதாவது செப்டம்பர் 12 முதல் தொடங்க உள்ளது.
2025ஆம் ஆண்டில் பொங்கல் விழா ஜனவரி 13 முதல் 16 ஆம் தேதி வரை உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட உள்ளது. அதன்படி ஜனவரி 13ம் தேதி போகி பண்டிகை, 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 15 ஆம் தேதி மாட்டுப்பொங்கல், 16ஆம் தேதி காணும் பொங்கல், என தொடர்ந்து நான்கு நாட்கள் பொங்கல் பண்டிகைக்காக அரசு விடுமுறை விடப்படுகிறது. இதையடுத்து மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று தடபுடலாக பண்டிகையைக் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிக்கைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. ரயில்களில் பயணம் செய்ய 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யப்பட வேண்டும். அதன்படி பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது. அதன்படி ஜனவரி 10ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளை அதாவது செப்டம்பர் 12ஆம் தேதி முன்பதிவு செய்யலாம். அதேபோல் ஜனவரி 11-ம் தேதி பயணம் செய்பவர்கள் செப்டம்பர் 13ஆம் தேதியும், ஜனவரி 12ஆம் தேதி பயணம் செய்பவர்கள் செப்டம்பர் 14ஆம் தேதியும், ஜனவரி 13ஆம் தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்வோர் செப்டம்பர் 15ஆம் தேதியும் டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும் பொங்கல் பண்டிகையின் போது சொந்த ஊருக்கு செல்வோர்கள் முன்பதிவு செய்ய ரயில் நிலைய முன்பதிவு மையம் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி என்ற இணையதளம் வாயிலாகவும் காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}