பெளர்ணமி கிரிவலம் .. திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Dec 26, 2023,12:27 PM IST

திருவண்ணாமலை: பெளர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாலைக்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.


திருவண்ணாமலையில் பெளர்ணமி கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது. திருவண்ணாமலையில்  உள்ள 14 கிலோமீட்டர் தொலைவிலான  கிரிவலப் பாதையில் மாதம் தோறும் பௌர்ணமி நாட்களில் பல லட்சக் கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். அருணாச்சலேஸ்வரர், அம்மனை வழிபட்டு செல்வதால் செல்வம் செழிக்கும் என்று நம்பப்படுகிறது.


இந்நிலையில் மார்கழி மாத பௌர்ணமி செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன் கிழமை வரை  இருப்பதால், அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் 20 சொகுசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 




பயணிகள் www.tnstc.in மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின்  செயலிகள் மூலம் முன் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வருடத்தின் 365 நாளும் மலை வலம் வரலாம் என்றாலும், பௌர்ணமியில் வரும் மலை வலம் மிகச் சிறப்புடையதாக கருதப்படுகிறது. அதனால் பக்தர்கள் அனைவரும் பௌர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம்  வருகின்றனர். இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். நமசிவாய மந்திரத்தை உச்சரித்தபடி சிவ புராணத்தையும் பாராயணம் செய்தபடி கிரிவலம் வர வேண்டும். 


பெளர்ணமியில் கிரிவலம் வந்தால் பற்பல நன்மைகள் கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். இதனால், பெளர்ணமி மலைவலம் சித்தர்களால் சிறப்பாக போற்றப்படுகிறது. தற்போது பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால் கூட்டம் அதிகளவில் வரும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்