வாஷிங்டன்: சிறு வயதில் சுன்னத் செய்வதால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் வரும் என்ற தகவலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், அவரது அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராகவும் உள்ள ராபர்ட் எப் கென்னடி ஜூனியரும் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இது ஒரு தவறான வாதம் என்று உடனடியாக இதை மருத்துவ நிபுணர்கள் மறுத்துள்ளனர். இந்தக் கூற்று அபத்தமானது என்றும் அவர்கள் நிராகரித்துள்ளனர்.
அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறுவது அதிபர் டிரம்ப்பின் வழக்கம்தான். இந்த வகையில் ஆட்டிசம் குறித்தும் அவர் தவறாக பேசியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக டிரம்ப் கூறுகையில்,

ஆண் குழந்தைகளுக்குச் செய்யப்படும் சுன்னத் ஆட்டிசத்தை ஏற்படுத்தும். சுன்னத்தின்போது வலியைத் தாங்கக் கொடுக்கப்படும் டைலெனால் என்ற வலி நிவாரணி மாத்திரைதான் இதற்குக் காரணம். அதுமட்டுமல்லாமல், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் டைலெனால் மாத்திரை எடுக்கக்கூடாது என்று கூறியிருந்தார்.
ஆனால் இதை மருத்துவ நிபுணர்கள் முற்றிலும் தவறான தகவல் என்று கூறி நிராகரித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கர்ப்பிணிப் பெண்களுக்கு வலி அல்லது காய்ச்சல் இருந்தால் மிதமான அளவில் டைலெனால் (அல்லது அசெட்டமினோஃபென்) எடுத்துக்கொள்ள அறிவுறுத்துகிறார்கள். அதில் தவறில்லை. மாத்திரையைத் தவிர்ப்பதால் வரும் காய்ச்சல் அல்லது அதிக வலிதான் தாய்க்கும் குழந்தைக்கும் அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.
டைலெனாலுக்கும் ஆட்டிசத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று மிகச் சமீபத்திய ஆய்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள்.
சுன்னத்துக்கும் ஆட்டிசத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறும் ஆய்வு பல தவறுகளைக் கொண்டுள்ளது என்று மற்ற விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். அந்த ஆய்வு சிறிய அளவில், உடல்நலக் குறைபாடுள்ள சிறுவர்களைப் பற்றியது; அதனால் ஆட்டிசம் வந்தது சுன்னத்தால் அல்ல, அவர்களின் மற்ற நோய்களால் இருக்கலாம் என்று நிபுணர்கள் விளக்கினர்.
சுன்னத்தால் எந்தப் பாதகமான உளவியல் விளைவுகளும் இல்லை என்று மற்ற பெரிய ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
கென்னடி வம்சாவளியைச் சேர்ந்த ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் பல வருடங்களாகவே "தடுப்பூசிகளால் ஆட்டிசம் வருகிறது என்ற ஆதாரமற்ற கொள்கையை கூறி வருகிறார். இந்தத் தடுப்பூசி வதந்திக்கு எதிராக, பல அறிவியல் ஆய்வுகள் உள்ளன. ஆனாலும், ஆட்டிசத்தின் காரணத்தைக் கண்டறியும் முயற்சியில் அவர், போலி அறிவியல் (Pseudoscience) சார்ந்த கருத்துக்களைப் பேசுவதாகவும், அது மக்கள் மத்தியில் தவறான பயத்தை உருவாக்குவதாகவும் நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
5 தொகுதி இடைத் தேர்தல்.. தவெக வியூகம் என்ன.. திமுக என்ன பண்ணப் போகுது.. அப்போ அதிமுக?
கேரளத்தில் பதிவான வழக்கு: தமிழகத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!
முடிவுக்கு வந்த குழப்பம்.. அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைப்பு
அஜித் குமார் தாயார் மோகினி மணி மறைவு: முதல்வர் விஜய், பிரபலங்கள் இரங்கல்!
"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" .. மறக்க முடியாத முதல் நாள் வகுப்பறை அனுபவம்!
Tamil Short Story: கௌரவம் சிறுகதை (சென்ற வார தொடர்ச்சி)... எல்லாம் முடிந்து விட்டது பாஸ்கர்!
முருகப் பெருமான் அவதரித்த திருநாள்.. வைகாசி விசாகமும், காவடியும்!
Sasikala Viswanathan Haiku: நிலவு ஒளிர்கிறது!
My mother stood through every pain... தாயின் தியாகங்கள்!
{{comments.comment}}